மேலும் அறிய

மூதாட்டி அடித்து கொலை.. 2 பெண்கள் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை - தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு..!

மூதாட்டி கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது வீராணம் ராஜா தோட்டம். இப்பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு சொந்தமாக வீடுகள் இருக்கும் நிலையில் அதில் ஒரு வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு பேச்சியம்மாளின் சகோதரி கருத்தாத்தாள்(60) கேட்டு வந்துள்ளார்.

அடித்துக்கொலை:

அதற்கு பேச்சியம்மாள் மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறிது நாள் கழித்து அதாவது கடந்த 24.08.2014 அன்று பேச்சியம்மாளின் கணவர் கருப்பசாமி மதுரைக்கு சென்றுள்ளார். இதனையறிந்த கருத்தாத்தாள் தனது கணவர் பிச்சையா, மகன் துரைமுத்து, மகள் மாரியம்மாள் ஆகியோருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று வீட்டை எழுதி தருமாறு பிரச்சினை செய்துள்ளனர். அப்போது பேச்சியம்மாள் மறுக்கவே அவரை 4 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். 

மறுநாள் வீட்டிற்கு வந்த கருப்பசாமி தனது மனைவி காயமடைந்த நிலையில் எழுந்து நடக்க முடியாமல் கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததோடு என்ன நடந்தது என்று விசாரித்த போது உண்மை தெரிய வந்துள்ளது. பின் பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை:

இது குறித்து கருப்பசாமி வீரகேரளம்புதூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கு விசாரணையானது தென்காசி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்  நேற்று தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் இருக்கும் போதே  முன்னதாக பிச்சையா உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகிய மூன்று பேரும் நீதிபதி முன்னிலையில் ஆஜராகினர். அப்போது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கருத்தாத்தாள், துரைமுத்து, மாரியம்மாள் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். கடந்த 9 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget