சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!
சிலைகள் காணாமல் போன வழக்கு விசாரணையில் கோயிலில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்டு,. திருட்டில் ஈடுபட்ட கோயில் குருக்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்
![சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது! Temple priests arrested for stealing idols in Sirkazhi சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/72b48cc90a897da6285c35620fe14a3d_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா மன்னங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள மன்னார்சாமி , நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீ நல்லகாத்தாயி அம்மன், ஸ்ரீ கஞ்சமலையீஸ்வரா, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து திருடப்பட்டு, தற்போது அந்த சிலைகள் எங்கு உள்ளன என்ற விபரம் தெரியாமல் உள்ளது.
இந்நிலையில் அந்த சிலைகளை கண்டறிந்து தருமாறு ஏனாக்குடி கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி என்பவர் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு அளித்திருந்தார். அந்த புகார் மனுவின் பேரில் இவ் வழக்கானது பல்வேறு பிரிவுகளில் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன் ஆகியோரின் உத்தரவுப்படி இவ்வழக்கின் புலன் விசாரணையானது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், பாலசந்திரன், சின்னதுரை மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இன்று சீர்காழி அருகில் உள்ள நந்தியநல்லூர் கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் குருக்கள் நெம்மேலி கிராமத்தை சூர்யமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது அவர் அளித்த வாக்கு மூலத்தில் நெம்மேலி விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோக சிலையும், இந்துசமய அறநிலையத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் இல்லாத காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், சிறிய வெள்ளி குத்து விளக்கு 2, சிறிய வெள்ளி குடம் 1 மற்றும் சனீஸ்வரன் வெள்ளி கவசம் கையாடல் செய்து தெரியவந்தது. இதனை அடுத்து அவற்றை சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டு கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
மேலும், இது தொடர்பாக கோயில் குருக்கள் சூர்யமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ள பிரதோஷநாயகர், பிரதோஷநாயகி சிலைகள் எந்த கோயிலை சார்ந்தது என்பதை கண்டுபிடிக்கபட வேண்டியுள்ளது என்றும், இந்த பிரதோஷ நாயகர் மற்றும் பிரதோஷ நாயகி சிலைகள் 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதற்கான முயற்சியில் எவரும் நுழைய முடியாத விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் பின்புறம் குருக்கள் மறைத்து வைத்திருந்ததாகவும், மேலும் இது தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது மற்றும் நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நல்லகாத்தாயி அம்மன், கஞ்சமலையீஸ்வரா, ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)