மேலும் அறிய

சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

சிலைகள் காணாமல் போன வழக்கு விசாரணையில் கோயிலில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்டு,. திருட்டில் ஈடுபட்ட கோயில் குருக்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா மன்னங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள மன்னார்சாமி , நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான  ஸ்ரீ நல்லகாத்தாயி அம்மன், ஸ்ரீ கஞ்சமலையீஸ்வரா, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து திருடப்பட்டு, தற்போது அந்த சிலைகள் எங்கு உள்ளன என்ற விபரம் தெரியாமல் உள்ளது.


சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

இந்நிலையில் அந்த சிலைகளை கண்டறிந்து தருமாறு ஏனாக்குடி கிராமத்தை சேர்ந்த நாகப்பன்  மகன் வீரமணி என்பவர் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு அளித்திருந்தார். அந்த புகார் மனுவின் பேரில் இவ் வழக்கானது பல்வேறு பிரிவுகளில் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன்  ஆகியோரின் உத்தரவுப்படி இவ்வழக்கின் புலன் விசாரணையானது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், பாலசந்திரன், சின்னதுரை மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. 


சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக இன்று  சீர்காழி அருகில் உள்ள நந்தியநல்லூர் கிராமத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் குருக்கள்  நெம்மேலி கிராமத்தை சூர்யமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்     போது அவர் அளித்த வாக்கு மூலத்தில் நெம்மேலி விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோக சிலையும், இந்துசமய அறநிலையத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் இல்லாத காத்தாயி அம்மன் வெள்ளி கவசம், சிறிய வெள்ளி குத்து விளக்கு 2, சிறிய வெள்ளி குடம் 1 மற்றும் சனீஸ்வரன் வெள்ளி கவசம் கையாடல் செய்து தெரியவந்தது. இதனை அடுத்து அவற்றை  சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றப்பட்டு கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.


சீர்காழி : கோயில் கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிலைகள் மீட்பு! குருக்கள் கைது!

மேலும், இது தொடர்பாக கோயில் குருக்கள் சூர்யமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.  கைப்பற்றப்பட்டுள்ள பிரதோஷநாயகர், பிரதோஷநாயகி சிலைகள் எந்த கோயிலை சார்ந்தது என்பதை கண்டுபிடிக்கபட வேண்டியுள்ளது என்றும், இந்த பிரதோஷ நாயகர் மற்றும் பிரதோஷ நாயகி சிலைகள் 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதற்கான முயற்சியில்  எவரும் நுழைய முடியாத விசாலாட்சி அம்மன் கருவறைக்குள் பின்புறம் குருக்கள் மறைத்து வைத்திருந்ததாகவும், மேலும் இது தொடர்பாக யார் யாருக்கு தொடர்பு உள்ளது மற்றும் நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான  நல்லகாத்தாயி அம்மன், கஞ்சமலையீஸ்வரா, ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
காதலனுக்காக ஐ - போன் திருடிய இளம் பெண் !! சென்னையில் நுாதன திருட்டு
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?
பிரீசர் பாக்ஸில் சிறுவன் சடலம் !! அடித்து கொன்ற அத்தை !! மாந்திரீக பின்னணி ?

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
தொடரும் சோகம்; சேலத்தில் நீட் மறுதேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை- விடிவு எப்போது?
Embed widget