மேலும் அறிய

தஞ்சாவூர்: ஓடும் பஸ்சிலேயே மூதாட்டியிடம் 15 சவரன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்கள்

பஸ்சில் வந்த மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள் இருந்த கைப்பையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியிலிருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்த மூதாட்டியிடம் இருந்து 15 சவரன் தங்க நகைகள் இருந்த கைப்பையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சிலேயே கைவரிசையை காட்டிய மர்மநபர்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி தேவாரம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கௌசல்யா (62). கடந்த 14ம் தேதி தனது கணவருடன் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு கௌசல்யா பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். இவர் தனது கைப்பையில் ஒரு பர்சில் 15 சவரன் தங்க நகையை வைத்திருந்தார். அப்போது வல்லம் மின்நகர் பகுதியில் இறங்குவதற்காக எழுந்தபோது தனது கைப்பையில் நகை வைத்திருந்த பர்ச்சை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.


தஞ்சாவூர்: ஓடும் பஸ்சிலேயே மூதாட்டியிடம் 15 சவரன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்கள்

இதுகுறித்து அவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பு மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓடும் பஸ்சிலேயே மூதாட்டியிடம் இருந்து நகையை மர்மநபர்கள் அபேஸ் செய்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.




பைக்கை வேகமாக ஓட்டியதை கண்டித்ததால் கோஷ்டி தகராறு:

தஞ்சை அருகே பைக்கை சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்றதை கண்டித்தால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அருகே ஜெபமாலை புதுத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி புகழ்மணி (45). இதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (43). இவருக்கு 17 மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயக்குமாரின் 14 வயது மகன் பைக்கில் வெகு வேகமாக ஜெபமாலைபுரம் பகுதியில் சென்றுள்ளார். இதை ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து தனது தந்தை ஜெயக்குமாரிடம் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜெயக்குமார் மற்றும் அவரது இரு மகன்கள், அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் ஜெயக்குமார் உட்பட 4 பேரும் சேர்ந்து ரவிச்சந்திரன் மற்றும் புகழ்மணியை கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகழ்மணி கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், 14 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல் ஜெயக்குமாரின் மனைவி ஜூலியட் மேரி கொடுத்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன், அவரது மனைவி புகழ்மணி, அப்பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணுவின் மகன் பாரத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். இந்த கோஷ்டி மோதல் தகராறு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Tata Punch EV Facelift 2026: புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Tata Punch EV Facelift 2026: புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
புதிய ரேஞ்ச், அம்சங்களுடன் களமிறங்கும் TATA Punch EV; யப்பா.! ஒரு சார்ஜுல இவ்ளோ தூரம் போகுமா.?
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Warren Buffett: ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
Toyota Innova Crysta: போய் வரவா.! இன்னோவா க்ரிஸ்டா மாடலை கைவிடும் டொயோட்டா - எப்போது? எதற்கு?
Toyota Innova Crysta: போய் வரவா.! இன்னோவா க்ரிஸ்டா மாடலை கைவிடும் டொயோட்டா - எப்போது? எதற்கு?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Embed widget