மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
’நுங்கம்பாக்கமாக மாறிய தாம்பரம்’ - பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை...!
தாம்பரம் தனியார் கல்லூரி மாணவியை காதலன் கத்தியால் குத்தி கொலை தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி
![’நுங்கம்பாக்கமாக மாறிய தாம்பரம்’ - பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை...! Swetha college student to death in Tambaram - Swathi already killed in 2016 at Nungambakkam railway station ’நுங்கம்பாக்கமாக மாறிய தாம்பரம்’ - பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/23/b04818b089aaa5425de38df179a5281a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குத்தி கொல்லப்பட்ட சுவேதா
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சுவேதா (25) தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக படித்து வருகிறார்.
![’நுங்கம்பாக்கமாக மாறிய தாம்பரம்’ - பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/23/5b40c1c5bdb917fd86baaedc9bdfa53a_original.jpg)
இந்த நிலையில் சுவேதா படித்துவரும் தாம்பரம் தனியார் கல்லூரி அருகே அவரும் அவரின் காதலன் திருக்குவளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு அவரும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.
![’நுங்கம்பாக்கமாக மாறிய தாம்பரம்’ - பட்டப்பகலில் கல்லூரி மாணவி குத்திக்கொலை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/23/250d8e33cbc713196e050778d0654464_original.jpg)
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இதே போன்றதொரு சம்பவம் சென்னையில் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion