மேலும் அறிய

நள்ளிரவில் வந்த கனவு: மனைவி மற்றும் மாமியாரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவர்!

மனைவிமீது சந்தேகம் ஏற்பட்டு நள்ளிரவில் மனைவி, மாமியாரை கடப்பாரையால் குத்தி கொன்ற கணவரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

கள்ளக்குறிச்சி  மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்  சரோஜா வயது (50) இவருடைய மகள் மகாலட்சுமி வயது ( 33)  விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமியை விழுப்புரம் மாவட்டம்  திருக்கோவிலூர் அடுத்த தேவிகாபுரத்தில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் வயது (48) என்பவருடன்  கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. 

திருமணம் ஆகி கணவருடன் தேவிகாபுரத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. முருகன் குடித்து விட்டு தினந்தோறும் வீட்டிற்கு வருவார். இதனால் இவர்களுக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு ஏற்பட்டும் போது எல்லாம் மகாலட்சுமி அவருடைய தாய் வீடான முருக்கம்பாடி கிராமத்திற்கு சென்று விடுவாராம், சிறிதுநாட்கள் கழித்து கணவர் முருகன் சமாதானம் கூறி மீண்டும் அவர் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவார் என கூறப்படுகிறது .


நள்ளிரவில் வந்த கனவு: மனைவி மற்றும் மாமியாரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவர்!

ஒரு நாள் திடிரென மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த முருகன், வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவர் மனைவியை அடிக்க துவங்கினர். இதனால் முருகனின் வீட்டிலிருந்து மகாலட்சுமி  தனது சொந்த ஊரான முருக்கம்பாடியில் உள்ள  தாயார் சரோஜா வீட்டிற்கு  ஐந்து நாட்கள் முன்பு வந்துள்ளார். 

இந்நிலையில்  முருகன் வழக்கம் போல் தனது மாமியார் வீட்டிற்கு வந்து மகாலட்சுமி தன்னுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தியுள்ளளார், இதற்கு மேல் நான் சந்தேகம் படமாட்டேன் என கூறி விட்டுஅங்கேயே இருந்துள்ளார். மாலை மாமியார் வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். அங்குள்ள மதுபான கடையில் மது வாங்கி அருந்திய முருகன், அதன் பின்னர் வீட்டிற்கு வந்து இரவு அங்கேயே தங்கியுள்ளார்.

 


நள்ளிரவில் வந்த கனவு: மனைவி மற்றும் மாமியாரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவர்!

 

போதையிலிருந்த முருகனுக்கு மனைவி மற்றொருவருடன் தொடர்பில் இருந்ததாக கனவு வந்துள்ளது. இதனால்  ஆத்திரம் அடைந்த முருகன், நள்ளிரவு 1மணியளவில் தகராறு செய்துள்ளார். அப்போது  மனைவி மற்றும் மாமியாரை  கடப்பாரையால் மண்டையில் தாக்கியுள்ளார். வலியில் மகாலட்சுமியும் அவருடைய தாயாரும்  கூச்சலிட்டுள்ளனர். இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர், மற்றும் உறவினர்கள் ஓடிவந்து வீட்டருக்கே பார்த்த போது முருகன் வெளியில் தலைதெறிக்க ஓடியுள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மகாலட்சுமியும் அவரது தாயார் சரோஜாவும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர்.

அங்கு இருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்து இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலே சரோஜா இறந்துள்ளார், அதன் பிறகு உயிருக்கு போராடிய மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்து போனார். 


நள்ளிரவில் வந்த கனவு: மனைவி மற்றும் மாமியாரை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவர்!

 தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் வந்து ஆய்வு செய்து அங்கு உள்ள உறவினர் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார். மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் மணலூர்பேட்டை காவல் துறையினர்  இந்த கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இரு உடல்களையும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய முருகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.           

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Trump Vs India: 350% வரின்னு சொன்350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Embed widget