மேலும் அறிய

மனித வெடிகுண்டாக மாறி மனைவியைக் கொலை செய்த கணவர்: எங்கு? ஏன்?

மனைவியைப் பாசமாகக் கட்டியணைப்பது போல் கட்டிப்பிடித்து தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

அடிடா அவள, உதைட அவள என்பதெல்லாம் பழசு. மனித வெடிகுண்டாக மாறி மனைவியைக் கொலை செய்வதுதான் புதுசு என திகைக்க வைத்திருக்கிறார் ஒருவர்.

மனித வெடிகுண்டு என்றவுடன், இதோ எங்கோ பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நடந்தது என்றெல்லாம் யோசிக்காதீங்க. நம்ம இந்தியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் அதன் தலைநர் அய்ஸ்வாலில் இந்த கொடூர கொலைச் சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 5 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் இப்போதுதான் வெளியில் வந்துள்ளது. 

போலீஸ் அறிக்கை:

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மிசோரம் மாநிலம் லுங்லெய் நகரத்தை சேர்ந்தவர் தலங் தியாங்கிலிமி. 61 வயதான இவர் தனது 62 வயதான மனைவி ரோஹிம்க்ளியானாவைக் கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதற்கு அவர் மனித வெடிகுண்டு தாக்குதலைத் தேர்ந்தெடுத்தார். தியாங்கிலிமி வெடிகுண்டை வெடிக்கச் செய்ய அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழக்க அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முதலில் நாங்கள் இது எதோ தீவிரவாத தாக்குதலோ என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டோம். பின்னர் தான் இல்லை இது தனிப்பட்ட முறையில் ஒரு தனிநபர் அவரது முன்னாள் மனைவி மீது நடத்திய கொலை வெறித் தாக்குதல் எனக் கண்டுபிடித்தோம். 

லுங்லெய் மாவட்டத்தின் சன்மாரி லாங் எனும் பகுதியில் அரசு அலுவலகத்துக்கு அருகிலேயே இந்தச் சம்பவம் நடந்ததால் தான் கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இறந்த போன தியாங்கிலிமி, ரோஹிம்க்ளியானா இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு தான் விவாகரத்து நடந்துள்ளது.

லாங் பஜாரில் தான் இவரும் இவரது மகளும் அருகருகே காய்கறிக் கடை நடத்துகின்றனர். சம்பவத்தன்று தியாங்கிலிமி, தனது முன்னாள் மனைவி ரோஹிம்க்ளியானாவின் காய்கறிக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு நின்று சிகரெட் புகைத்துள்ளார். அதற்கு ரோஹிம்க்ளியானா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனைவியுடன் சமாதானமாக பேசுவதுபோல் பேச்சுக்கொடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். பின்னர் மனைவியைப் பாசமாகக் கட்டியணைப்பது போல் கட்டிப்பிடித்து தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் தியாங்கிலிமி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க அவரது மனைவி மருத்துவமனையில் இறந்தார். 

இவ்வாறு போலீஸ் அதிகார் வான்ச்சவாங் கூறினார். மேலும் வெடிகுண்டு தயாரிக்க தியாங்கிலிமி ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரை விவாகரத்து சர்வ சாதாரணம் என்றாலும் இதுபோன்று மனித வெடிகுண்டாக மாறி முன்னாள் மனைவியைக் கொலை செய்வதெல்லாம் இதுவே முதன்முறை என்று காவல்துறை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?
​9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Car Theft : ’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்! - இந்த பட்டியலில் உங்க கார் இருக்கா?
’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்!
Embed widget