மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kanchipuram: காலேஜ் ஃபர்ஸ்ட் டே..ஆசையாய் காலேஜ் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்
Kanchipuram Accident : காஞ்சிபுரம் அருகே கல்லூரிக்குச் சென்ற முதல் நாளே வாகன விபத்தில் சிக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
![Kanchipuram: காலேஜ் ஃபர்ஸ்ட் டே..ஆசையாய் காலேஜ் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம் student's death in a car accident on the first day of college near Kanchipuram TNN Kanchipuram: காலேஜ் ஃபர்ஸ்ட் டே..ஆசையாய் காலேஜ் சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/0683367d175131eb1ee71f984f46a9f31688577673554113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தம்பிதுரை
காஞ்சிபுரம் அருகே கல்லூரி கட்டணம் செலுத்த முதல் நாள் கல்லூரி சென்ற மாணவன் தம்பிதுரை கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : சென்னையை சேர்ந்த ராஜன் என்பவரது மகனான ரா.தம்பிதுரை சிறு வயது முதலே காஞ்சிபுரம் ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனது பாட்டியின் வளர்ப்பில் இருந்துள்ளார். காஞ்சிபுரத்தில் பிளஸ் டூ முடித்த நிலையில், காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு இளங்கலை அறிவியல் வகுப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முதல் நாள் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி கட்டணமும் , கட்டிவிட்டு வருவதாக தனது மாமாவிடம் கூறிவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்ப சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி வாகனத்தின் மீது மோதியது. வாகனம் நிலை தடுமாறி சாலையில் விழுந்தபோது தம்பிதுரை தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் 108 அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தும் , காவல்துறைக்கு வாகன விபத்து தொடர்பான தகவல் அளித்தனர். 108 வாகனம் விரைவாக வந்து அவரை பரிசோதித்த நிலையில் தலை காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை தெரிவித்துள்ளனர்.
கல்லூரிக்கு சென்ற முதல் நாளே
வாகன விபத்து குறித்து பாலு செட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது உடலை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் டூ விடுமுறை காலத்தில் கேஎஃப்சி நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் பணியை பகுதி நேரமாக செய்து கொண்டு கல்வி பயில விரும்பியுள்ளார் என அவர்கள் உறவினர்கள் தெரிவித்து கண்ணீர் வடித்தனர். கல்லூரிக்கு சென்ற முதல் நாளே வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கல்லூரி மாணவர்களுடைய அதிர்ச்சியும் அவரது உறவினர்களும் பெருத்த சோகத்தில் உள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
திரை விமர்சனம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion