மேலும் அறிய

யாரிடமும் சொல்லாதீங்க... வயிற்றில் ஊசியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை... ஆபரேஷன் அலட்சியம்!

தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் ஆபரேஷன் செய்யப்பட்ட வாலிபரின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனையில் அலட்சியத்தால் ஆபரேஷன் செய்யப்பட்ட வாலிபரின் வயிற்றுக்குள் ஊசி வைத்து தைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது வயிற்றில் இருந்து ஊசி அகற்றப்பட்டது. இதுபற்றி கொடுக்கப்பட்டுள்ள புகாரின்படி, போலீசார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28). இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். கடந்த 30ம் தேதி கூலி வேலை செய்தபோது ரஞ்சித்குமாரின் வயிற்றில் காயம் ஏற்பட்டதால் அதற்கு சிகிச்சை பெற பட்டாளம் டிமலஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு ரஞ்சித்குமாருக்கு வயிற்றுப்பகுதியில் 13 தையல்கள் போட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 3 நாட்கள் கழித்து மீண்டும் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், வீட்டுக்கு வந்த ரஞ்சித்குமாருக்கு மறுநாள் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்து பேசிய நபர்,  உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரஞ்சித்குமார் அங்கு சென்றபோது தையல் பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ரஞ்சித்குமார், நேற்று தானே தையல் போடப்பட்டது. அதற்குள் பிரிப்பார்களா? என்று கேட்டுள்ளார்.


யாரிடமும் சொல்லாதீங்க... வயிற்றில் ஊசியை வைத்து தைத்த தனியார் மருத்துவமனை... ஆபரேஷன் அலட்சியம்!

அதற்கு மருத்துவமனை ஊழியர்கள், இரண்டு தையல்கள் மட்டும் பிரிக்கவேண்டும். காயம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன்பிறகு வயிற்றில் இரண்டு தையல்களை பிரித்து, ஏதாவது குத்துகிறதா என்று கேட்டபோது ஆமாம் என்று ரஞ்சித்குமார் கூறியுள்ளார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்தபோது ரஞ்சித்குமார் வயிற்றில் சிறிய அளவிலான ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார், மருத்துவமனை நிர்வாகத்திடம்  கேட்டபோது அவர்கள்,  “மீண்டும் ஆபரேஷன் செய்து ஊசியை அப்புறப்படுத்திவிடலாம். இதை யாரிடமும் சொல்லாதீர்கள், பணம் தருகிறோம்” என்று கூறியதாக தெரிகிறது. 

ஆனால் இதை ஏற்க மறுத்த ரஞ்சித்குமார் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த ஊசி அகற்றப்பட்டது. இதுகுறித்து ரஞ்சித்குமார் கொடுத்துள்ள புகாரின்படி, புளியந்தோப்பு போலீசார் ரஞ்சித்குமாரிடமும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தனியார் மருத்துவமனை மருத்துவர் மோகன்ராஜ் புளியந்தோப்பு துணை கமிஷனர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரஞ்சித்குமாருடன் வந்த நபர்கள் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget