மேலும் அறிய

கல்லூரி மாணவியை 10 முறை கத்தியால் குத்திய நபர்: பெங்களூருவில் பயங்கரம்!

லயஸ்மிதாவை தாக்கிய கல்யாண், தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பேரதிர்ச்சி தரும் சம்பவமாக பெங்களூரு பிரசிடென்சி பல்கலைக்கழக கல்லூரி வளாகத்தில் 19 வயது பிடெக் மாணவி லயஸ்மிதா 10 முறை கத்தியால் குத்தப்பட்டு இறந்துள்ளார். சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பவன் கல்யாண் தன் காதலை லயஸ்மிதா நிராகரித்ததால் அவரைத் தாக்கியதாகப் போலீஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. லயஸ்மிதாவை தாக்கிய கல்யாண், தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே லயஸ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாபெரும் மெட்ரோ நகரமான பெங்களூருவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கல்லூரி மாணவியை 10 முறை கத்தியால் குத்திய நபர்: பெங்களூருவில் பயங்கரம்!

மற்றொரு சம்பவம்

டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். விசாரணைக்கு பிறகு, கைது செய்யப்பட்ட அப்தாப் தற்போது சிறையில் உள்ளார்.

இதற்கிடையே, டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் அவர் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அதை தவறுதலாக தாக்கல் செய்துவிட்டதாகக் கூறி மனுவை திருபெற்றார். எனவே, பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான அப்தாப், டிசம்பர் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை திரும்பப் பெற விரும்புவதாக கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜரான அப்தாப்பின் வழக்கறிஞர் எம்.எஸ். கான், "தனக்கும் தன்னுடைய கட்சிதாரர் ஆகியோருக்கிடையே நிலவிய தவறாக புரிதல் காரணமாக பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது" என்றார்.

வாதத்தை கேட்டறிந்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விருந்தா குமாரி, "பிணை மனு திரும்பப் பெறப்பட்டதால் அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்றார். 

ஷ்ரத்தாவின் தந்தை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, "குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், அப்தாபின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் மனு தாக்கல் செய்ய தனது வழக்கறிஞருக்கு அனுமதி அளிக்க அப்தாப் மறுத்துள்ளார். அவருடைய வக்கீல் முதலில் மனித நேயத்திற்காகவும் நின்றிருக்க வேண்டும். இருப்பினும், இன்று அவர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்" என்றார்.

பிணை மனவில் கையொப்பமிட்டிருந்தாலும், தனது வழக்கறிஞர் தன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் போகிறார் என்பது தனக்குத் தெரியாது என்று அப்தாப் மின்னஞ்சல் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.

அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 

வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கு மத்தியில், மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் சில மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. மண்டை ஓட்டின் அடிப்பகுதி, துண்டிக்கப்பட்ட தாடை பகுதி மற்றும் பல எலும்புகள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில், கண்டெடுக்கப்பட்ட எலும்பில் இருந்து டிஎன்ஏவும் ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏவும் பொருந்தி போனது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
கடலூரில் ரவுடி வெட்டிக்கொலை - வயல்வெளியில் சிதறிக்கிடந்த இரத்தம்; மக்கள் அதிர்ச்சி
கடலூரில் ரவுடி வெட்டிக்கொலை - வயல்வெளியில் சிதறிக்கிடந்த இரத்தம்; மக்கள் அதிர்ச்சி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Sasikumar:
Sasikumar: "சசிகுமார் எனும் ஃபீனிக்ஸ் பறவை.." புகழாரம் சூடிய நந்தன் பட இயக்குனர்!
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
Embed widget