மேலும் அறிய

உஷார் மக்களே.. Olx-இல் பொருள்களை விற்கும்போது 5 லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது?

பொதுமக்களும் ஆன்லைனில் நடைபெறும் நூதன மோசடிகளில் சிக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனைகளை முறையாக கையாள வேண்டும் என்ற கோரிக்கையும் போலீசார் முன்வைக்கின்றனர்.

மும்பையில் olx மூலம் ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இன்றைய சமூகத்தில்  வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு ஆன்லைன் பரிவர்த்தனைகளும் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலையோர வியாபாரி, பழக்கடைகள், சலூன்  முதல் நட்சத்திர  ஹோட்டல் வரை எங்கும் பேடிஎம், கூகுள் பே, யுபிஐ செயலிகள் மூலம் தான் பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இதற்கு அனைவரும் அடிக்ட் ஆகிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த முன்னேற்றம் பல நேரங்களில் பல்வேறு நூதன மோசடிகளுக்கும் வழிவகுக்கிறது. இதோடு மட்டுமின்றி தற்போது பயன்படுத்தியப் பழைய பொருள்களையெல்லாம் ஓஎல்எக்ஸ், சுலேகா டாட் காம் போன்ற விளம்பர தளங்களின் மூலம் விற்பனை செய்யும் வசதியும் நம்மிடம் உள்ளது. இதன் மூலம் சுமுகமாக பொருள்களை விற்பனை செய்துவந்தாலும் சில நேரங்களில் ஏற்படும் நூதன மோசடி தான் நம்மை ஒவ்வொரு முறையும் இதுப்போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் நம்மைப் பாதுகாக்கிறது. ஆனாலும் பல நேரங்களில் நம்மையும் அறியாமல் நூதன முறையில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் சமீபத்தில் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

உஷார் மக்களே.. Olx-இல் பொருள்களை விற்கும்போது 5 லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது?

மும்பையில் தாதர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னிடம் உள்ள தங்கும் அறை பெட்டியை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து உறவினர் மற்றும் நண்பர்களி்டம் தெரிவித்தும் எந்தவித பதிலும் வரவில்லை என்பதால் அடுத்தபடியாக இந்தப்பொருளை ஓஎல்எக்ஸ் இலவச விளம்பர தளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பிரிதீப் குமார் என்ற நபர், தனக்கு அந்தப் பொருள் தேவைப்படுவதாகவும், தான் ராணுவ அதிகாரி என்றும் அதற்கான சில ஆவணங்களையும் அப்பெண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளார். ராணுவ அதிகாரிதானே என்ற நம்பிக்கையைில் பெட்டியை ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இதனையடுத்து கூகுள் பே எண்ணில் இருந்து ரூ. 2 அனுப்புகிறோம். இதனை உறுதிப்படுத்திய பின்பாக அனைத்துப் பணத்தையும் அனுப்புவதாக அப்பெண்ணிடம் பிரேம் குமார் என்ற நபர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்பணம் அப்பெண்ணிற்குக் கிடைக்கவில்லை எனவும் கூறியதையடுத்து, உங்கள் அக்கவுன்ட் நம்பரிலிருந்து எங்களுக்கு நீங்கள் ரூ.2 முதலில் அனுப்பி வைக்குமாறும், அதனை சேவ் செய்த பிறகு நாங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அப்பெண் அவ்வாறு மேற்கொள்ளும் போது  அப்பெண்ணின் QR code பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் அப்பெண்ணின் கணக்கில் இருந்து டெபிட் ஆகியுள்ளது. என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பி இருந்த நிலையில் தான் அப்பெண்ணின் வங்கிக்கணக்கிலிருந்து  ரூபாய் 4.55 லட்சம் வரை டெபிட் ஆகிவிட்டது. இதனையடுத்து தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்த அப்பெண் உடனடியாக, நடந்த விஷயங்களையெல்லாம் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

உஷார் மக்களே.. Olx-இல் பொருள்களை விற்கும்போது 5 லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது?

இதனையடுத்து புகாரினை ஏற்றுக்கொண்ட Bhoiwada காவல்நிலையப் போலீசார் ராணுவ வீரர் என பொய்யாக ஏமாற்றிய நபரின் மீது தொழில்நுட்பச்சட்டத்தின் கீழ் ஏமாற்றுதல் மற்றும் ஆள் மாறாட்ட வழக்கினை பதிவு செய்த போலீசார் இதுகுறித்து  விசாரணை நடத்திவருகின்றனர். இப்படி ஒஎல்எக்ஸ் மூலம் ஆன்லைன் மோசடி நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்களும் இதுபோன்று எந்த பிரச்சனைகளிலும் சிக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனைகளை முறையாக கையாள வேண்டும் என்ற கோரிக்கையும் போலீசார் முன்வைக்கின்றனர். 

 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
Embed widget