மேலும் அறிய

Crime: திருடன் என சந்தேகம்... மொட்டை அடித்து, சாக்கடை சுத்தம் செய்ய வைத்து கும்பல் தாக்குதல்... அதிர்ச்சியூட்டும் வீடியோ!

உள்ளூர்வாசிகள் இணைந்து அந்நபரை கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியும், அவரது தலை முடியை மழித்தும், சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.

திருடன் என சந்தேகிக்கப்பட்ட நபரின் தலையை மொட்டை அடித்தும், சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தும் உள்ளூர்வாசிகள் அடங்கிய கும்பல் சித்திரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாக்கடை சுத்தம் செய்ய வைத்து கொடுமை

டெல்லி, வாஜிராபாத் பகுதியில் மோட்டார் ஒன்றை திருடியதாக இந்நபர் சந்தேகிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து அந்நபரை கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியும், அவரது தலை முடியை மழித்தும், சாக்கடையை சுத்தம் செய்ய வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் அந்நபரைக் கைது செய்த நிலையில், இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

மேலும், கைதான நபரின் பெயர் சாகில் (28) எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் கும்பல் தாக்குதல் சம்பவம்

முன்னதாக ராஜஸ்தானில் இதேபோல் திருடன் என நினைத்து கும்பல் தாக்குதல் செய்யப்பட்ட காய்கறி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

45 வயதான காய்கறி வியாபாரி சிரஞ்சி சைனி  ஆக.15ஆம் தேதி அல்வார் மாவட்டம், ரம்பாஸ் கிராமத்தில் காய்கறிப் பண்ணையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் டிராக்டர் ஒன்று திருடு போனதை அடுத்து அதனைத் தேடி காவல் துறையினரும், மற்றொரு புறம் சில நபர்களுடன் டிராக்டர் உரிமையாளரும் வந்துள்ளார்.

இந்நிலையில் சிரஞ்சி சைனியை திருடன் எனத் தவறாக நினைத்து டிராக்டர் உரிமையாளரும் அவருடன் வந்தவர்களும் ஒன்று சேர்ந்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

மற்றொருபுறம், காவலர்கள் உண்மையான திருடர்களை துரத்திச் சென்று அவர்களை நெருங்கிய நிலையில், காவலர்கள் தங்களை சுற்றி வளைத்ததை உணர்ந்து டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தப்பியோடி உள்ளனர்.

இந்நிலையில் சைனி தாக்கப்படுவதை அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று முதலுதவி அளித்துள்ளனர்.

 

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஆக.16ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக சிரஞ்சி சைனியின் மகன் யோகேஷ் சைனி தன் தந்தையின் மரணத்துக்கு காரணமான டிராக்டர் உரிமையாளர் விக்ரம் உள்பட இருவர் மீது புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget