மேலும் அறிய

குடி குடியை கெடுக்கும்: தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை கொன்ற கணவன் கைது

’’நான் எனக்காக வாங்கி வைக்கும் மதுவை எனது மனைவி எடுத்து குடித்துவிடுவார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும்’’

ஓமலூர் அருகே தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்த மனைவியை கணவன் அடித்து கீழே தள்ளி கொலை செய்தார். தலைமறைவாக இருந்த கணவரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடி குடியை கெடுக்கும்: தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை கொன்ற கணவன் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர்  அருகே உள்ள கஞ்ச நாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், சரண்யா தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில், இருவரும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரண்யா திடீரென இறந்து விட்டதாக கூறி, ஈரோட்டில் உள்ள அவரது தம்பி நந்த குமாருக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நந்த குமார், தனது அக்கா சரண்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது சகோதரி இயற்கையாக இறக்கவில்லை எனவும் மாமா லட்சுமணன் அடித்து கொலை செய்து விட்டதாகவும் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினரிடம் புகார் அளித்ததை தெரிந்துகொண்ட லட்சுமணன் தலைமறைவாகி விட்டார். இந்த புகாரினை தொடர்ந்து ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.  

 

குடி குடியை கெடுக்கும்: தனக்கு வாங்கி வைத்திருந்த மதுவை குடித்ததால் மனைவியை கொன்ற கணவன் கைது

மேலும், சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் தேடி வந்தனர். பின்னர், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். பின்னர், நடந்த சம்பவம் குறித்து லட்சுமணன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது தனக்கும், தனது மனைவிக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது.

நான் எனக்காக வாங்கி வைக்கும் மதுவை எனது மனைவி எடுத்து குடித்துவிடுவார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அதே போல எனது மதுவை குடித்துவிட்டு தகறாரு செய்த மனைவியை கீழே தள்ளிய போது, தலையில் அடிபட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சரண்யாவின் கணவர் லட்சுமணனை கைது செய்த தீவட்டிப்பட்டி காவலர்கள் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றத்தைத் தானே ஒத்துக் கொண்டதால் லட்சுமணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுவிற்காக மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Edappadi Palanisamy: “தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் - என்ன சொன்னார் இபிஎஸ்.?
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
அதிரப் போகும் மக்களவை, மாநிலங்களவை – எம்.பிக்களுக்கு சி.எம். போட்ட முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
பள்ளிகளில் ப வடிவ இருக்கை கட்டாயமா? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?
Viral Video: அஃபயரை போட்டுக் கொடுத்த கேமராமேன்.. கிஸ் கேமில் HR உடன் CEO, பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
Viral Video: அஃபயரை போட்டுக் கொடுத்த கேமராமேன்.. கிஸ் கேமில் HR உடன் CEO, பொங்கி எழுந்த நெட்டிசன்கள்
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
INDIA Bloc: பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?
Embed widget