மேலும் அறிய

இதற்காகதான் மாணவியை கத்தியால் குத்தினேன் - சேலம் இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தினேன் என கைதான வாலிபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், இனாம்பை ரோஜியை சேர்ந்த ஐடிஐ முடித்து விட்டு வேலை தேடி வரும் மோகனபிரியன் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து நேரில் பார்க்காமலேயே செல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் மோகனபிரியனை மாணவி நேரில் பார்த்துள்ளார். அவரை நேரில் பார்த்ததும், உன்னை பிடிக்கவில்லை என மாணவி தெரிவித்துள்ளார். இது மோகனபிரியனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே உறவினருடன் மாணவிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதனால் மாணவி, மோகனபிரியனிடம் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டார். இது மோகனபிரியனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போனில் மணிக்கணக்கில் பேசிவிட்டு இப்போது தன்னை பிடிக்கவில்லை என்று கூறும் மாணவிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டு்ம் என முடிவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்ல சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு மாணவி வந்துள்ளார். அப்போது அங்கு தயாராக மோகனபிரியன், மாணவியை பார்த்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகனபிரியன், கத்தியால் மாணவியை சரமாரியாக குத்திவிட்டு தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுபற்றி சேலம் டவுன் போலீசார், மோகன பிரியன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகனபிரியன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியை விட மோகனபிரியனுக்கு 2 வயது குறைவு. மோகனபிரியனுக்கு வேலை எதுவும் இல்லை. இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகி பேசி வந்துள்ளனர். ஒருமுறை மட்டும் நேரில் பார்த்து பேசியுள்ளனர். அப்போதே மாணவிக்கு மோகனபிரியனை பிடிக்கவில்லை. இதுபற்றி அவரிடம் மாணவி தெரிவித்துள்ளார். மாணவிக்கு உறவினரின் மகனை திருமணம் செய்து வைக்க பெற்றோர் செய்துள்ளனர். எனவே மாணவி, மோகன பிரியனிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் விரக்தியடைந்த மோகனபிரியன், மாணவியை பார்த்து பேச சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். மாணவி வருவதற்கு 1மணி நேரத்திற்கு முன்பே வந்து காத்திருந்துள்ளார். மாணவி வந்ததும் மோகனபிரியன் அவருடன் பேசியுள்ளார். அப்போது காதலிக்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன பிரியன், தான் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மீன் அறுக்கும் கத்தியால் மாணவியை குத்தி விட்டு தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றனர். தொடர்ந்து மோகனபிரியனிடம் சேலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget