மேலும் அறிய

குடிப்பழக்கம் இல்லாத முதியவர்; வலுக்கட்டாயமாக காரில் தூக்கிசென்ற தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையம்

தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் இருட்டு அறையில் அடைத்து வைத்து மாத்திரைகளை கொடுத்து கொடுமைப்படுத்துவதாகவும், தன்னைப் போன்ற மற்றவர்களுக்கும் இந்த கொடுமை நடப்பதாக முதியோர் குற்றச்சாட்டு.

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் குளிர்பானம் விற்பனை முகவராக செயல்பட்டு வந்தார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், பிரேமா, மலர்விழி, நந்தினி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் மலர்விழி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறியுள்ளார். மலர்விழி காதல் திருமணம் செய்த காரணத்தினால் தாய் சந்திரா, சகோதரிகள் இருவரும் மலர்விழியின் மீது கடும்கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் தந்தை நாராயணன் உடன் அடிக்கடி மலர்விழி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணனின் மனைவி சந்திரா மற்றும் இரண்டு மகள்கள் சேர்ந்து நாராயணனை கொடுமைப்படுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

குடிப்பழக்கம் இல்லாத முதியவர்; வலுக்கட்டாயமாக காரில் தூக்கிசென்ற தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையம்

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி நாராயணன் தனியாக வசித்து வந்த நிலையில், குளிர்பானங்கள் விற்பனைக்காக கடையின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது நாராயணனை, தீபக் என்ற நபர் மூன்று வாலிபருடன் சேர்த்து காரில் வலுக்கட்டாயமாக அடித்து தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து நாராயணனின் மகள் மலர்விழி காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் விசாரணையில் நாராயணன் (New life recovery foundation) என்ற தனியார் மீட்பு மையத்தில் வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மலர்விழி நேரடியாக தந்தையை சந்திக்க முயற்சித்தபோது, அனுமதி அளிக்காததால் இதுதொடர்பாக சேலம் மாநகர காவல்துறையினர் மற்றும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் நீதிமன்றத்தில் நாராயணனை நேரடியாக காவல்துறையினர் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் நாராயணனின் விருப்பப்படி மலர்விழியுடன் நீதிமன்றம் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நாராயணன் மற்றும் அவரது மகள் மலர்விழி ஆகிய இருவரும் தந்தை கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் துன்புறுத்திய வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். தனியார் போதை மீட்பு மையம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாராயணன் மற்றும் அவரது மகள் மலர்விழி கூறுகையில், தனியார் மீட்பு மையத்தில் நாராயணனை கடந்த 13 நாட்களாக வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளனர். குறிப்பாக முறையாக உணவு வழங்காமலும், இருட்டு அறையில் அடைத்து மாத்திரைகளை கொடுத்து மயக்க நிலையை ஏற்படுத்தி கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார். தன் மீது இருக்கும் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டதாகவும் கூறியுள்ளார். எனவே காரில் அழைத்துச் சென்ற தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தை சேர்ந்த தீபக் என்பவர் பணம் கொடுத்து தனது மனைவி மற்றும் மகள்கள் கூறி தான் அடைத்து வைத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக கூறியுள்ளார். எனவே தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோன்று தனியார் மீட்பு மையத்தில் அனைவருக்கும் மாத்திரைகள் கொடுத்து கொடுமைப்படுத்துவதாகவும் இந்த மீட்பு மையம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget