மேலும் அறிய

“2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி ஏன் கொலை செய்தேன்?” - தாய் பரபரப்பு வாக்குமூலம்

தகாத உறவை கணவர் கண்டித்ததால் இரண்டு குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முயற்சித்ததாக வாக்குமூலம்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார், கூலித் தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு விக்னேஷ், சதீஷ்குமார் என 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த 28 ஆம் தேதி இரவு, வீட்டின் அருகேயுள்ள செப்டிக் டேங்கில் விஜய குமாரின் குழந்தைகள் இருவரும் விழுந்து விட்டதாக கூறி, இளவரசி அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு இருந்தவர்கள் விரைந்து சென்று, செப்டிக் டேங்கில் விழுந்து கிடந்த 2 குழந்தைகளை மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இளவரசி தகாத உறவு விவகாரத்தில், தன்னுடைய 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்து விட்டதாக, விஜய குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, இளவரசி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் 2 குழந்தைகளையும் செப்டிக் டேங்கில் வீசி, கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து இளவரசி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியது, "எனக்கும், வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபரிடம் உறவு இருந்தது. இதையறிந்த எனது கணவர் விஜயகுமார், தகாத உறவை கைவிடும் படி கூறி என்னை கண்டித்தார். இதன் காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 28 ஆம் தேதி, இது தொடர்பாக மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, என்னை கொல்லாமல் விட மாட்டேன் என கூறி விட்டு, கணவர் வெளியே சென்று விட்டார்.

இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். இதையடுத்து குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். பின்னர், வீட்டின் அருகில் உள்ள செப்டிக் டேங்கில், 2 குழந்தைகளையும் வீசினேன். பின்னர், நானும் டேங்கின் உள்ளே குதித்தேன். அப்போது, திடீரென பயத்தில் அலறினேன். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து என்னையும், குழந்தைகளையும் மீட்டனர். ஆனால், அதற்குள் குழந்தைகள் உயிரிழந்து விட்டனர்" இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, இளவரசியை கைது செய்த போலீசார், அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
IPL 2026: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
iPhone 17 Pro Max Discount: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Embed widget