இன்ஸ்டா காதலால் நடந்த கொடூரம்.. பட்டப்பகலில் பரபரப்பான சேலம் - நடந்தது என்ன?
மக்கள் நடமாட்டம் மிகுந்த சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உயரியில் படித்து வருகிறார். இவருக்கு ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன பிரியன் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் இன்று காலை சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மோகன பிரியன் திடீரென கத்தியை எடுத்து கல்லூரி மாணவியை குத்தி விட்டு தனது கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழித்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், மோகன பிரியனை விட, கல்லூரி மாணவிக்கு வயது அதிகம் என்பதால் வீட்டில் காதலுக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன பிரியன் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

