மேலும் அறிய

காஞ்சிபுரம் TO கன்னியாகுமரி வரை கொள்ளை - திருட்டு வழக்கில் சிக்கியவர்களை விருட்டென பிடித்த போலீஸ்

திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் திருட்டு போன 14 லட்சம் மதிப்பிலான 44 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர்

தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் அந்தோணிராஜ் (53). இவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று வேலைக்கு சென்று இருந்தபோது, வீட்டின் பின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 45 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

                                காஞ்சிபுரம் TO கன்னியாகுமரி வரை கொள்ளை - திருட்டு வழக்கில் சிக்கியவர்களை விருட்டென பிடித்த போலீஸ்
 
விசாரணையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் மாவட்டம் அம்மன்நகரை சேர்ந்த ஜேக்கப் மகன் மனோஜ்ராஜ் (35), கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக்ராஜா (24), ராஜாராம் (26), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சூர்யாநகரை சேர்ந்த விருமாண்டி மகன் திலீப்திவாகர் (26) என்பது தெரியவந்தது. மேலும் இந்த 4 பேரும், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

                               காஞ்சிபுரம் TO கன்னியாகுமரி வரை கொள்ளை - திருட்டு வழக்கில் சிக்கியவர்களை விருட்டென பிடித்த போலீஸ்
 
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஜெயிலில் இருந்த 4 பேரையும் விசாரணைக்காக கோர்ட்டு மூலம் போலீஸ் காவலில் எடுத்தனர். அவர்களை சிப்காட் போலீஸ் வழக்கிலும் கைது செய்து, நடத்திய விசாரணையில், அந்தோணிராஜ் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து திருட்டு போன 14 லட்சம் மதிப்பிலான 44 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் 4 பேரையும் திருச்சி ஜெயிலில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நகையை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

                                காஞ்சிபுரம் TO கன்னியாகுமரி வரை கொள்ளை - திருட்டு வழக்கில் சிக்கியவர்களை விருட்டென பிடித்த போலீஸ்
 
கொள்ளையில் ஈடுப்பட்ட கொள்ளையர்களான மனோஜ்ராஜ் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 10 திருட்டு வழக்குகளும், எதிரி கார்த்திக் ராஜா மீது கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 12 திருட்டு வழக்குகளும், எதிரி ராஜாராம் மீது கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 வழக்குகளும், கன்னியாகுமரி  மாவட்டத்தில் 5 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 வழக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 16 திருட்டு வழக்குகளும், எதிரி திலீப் திவாகர் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 வழக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 வழக்குகளும், திருப்பூர் மாவட்டத்தில் 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 வழக்குகளும் என 14 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
சட்டசபையில் பீடா போட்டு துப்பிய உ.பி எம்.எல்.ஏ: யார்னு தெரியும், தனியா வரச் சொன்ன சபாநாயகர்.!
DMDK-ADMK: வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
வாய்விட்ட இபிஎஸ்.! உடைகிறதா அதிமுக-தேமுதிக கூட்டணி? ட்விட்டை டெலிட் செய்த பிரமேலதா.!
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
தஞ்சாவூர் மக்களே வரும் 6ம் தேதி வரை 12 மணிக்கு வெளியில் வராதீங்க... எதுக்கு தெரியுங்களா?
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
நயன்தாரா மீண்டும் அம்மனாக அவதாரம் எடுக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு பூஜை போட்டாச்சு!
Embed widget