மேலும் அறிய

சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார்.

ராமநாதபுரம், மாவட்டம் கடலாடி அருகே ஆ.புனவாசல் கண்மாய் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.  சேவலின்  காலில் கத்தியை கட்டி, மோதவிடும் இந்த சண்டையில் சேவல் உயிரிழக்கும் அளவிற்கு போட்டி கடுமையாக இருக்கும். இந்த சண்டையை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதும் வழக்கம். ரகசியமாக நடந்த இந்த கத்தி சேவல் சண்டை குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அப்போது போலீஸ் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கிருந்து சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். அதை கண்ட போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பின் அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

இதனைத் தொடர்ந்து, ஜோதிநாதன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரட்டியதால் தான் ஜோதிநாதன் இறந்ததாக கூறி அவரது குடும்பத்தார், கடலாடி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசாரை கண்டித்து கடலாடி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமரசம் செய்ய போலீசார் எடுத்த முயற்சிகள் எடுபடாத நிலையில், தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தங்களுக்கும் ஜோதிநாதன் இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், ஜோதிநாதனின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேவல் சண்டை பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், அதை காரணம் காட்டி போலீசார் கறார் காட்டி விரட்டியதாகவும், அதனால் அப்பாவி ஒருவர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். விவசாயியான ஜோதிநாதனின் இறப்பு அவரது குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ள நிலையில், போலீசார் விரட்டியதில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களின் உறவினர்களும் போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராம மக்களை சமரசம் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சம்பவம் தொடர்பான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கியுள்ளார். வேறு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கடலாடி காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
Embed widget