மேலும் அறிய

சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார்.

ராமநாதபுரம், மாவட்டம் கடலாடி அருகே ஆ.புனவாசல் கண்மாய் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.  சேவலின்  காலில் கத்தியை கட்டி, மோதவிடும் இந்த சண்டையில் சேவல் உயிரிழக்கும் அளவிற்கு போட்டி கடுமையாக இருக்கும். இந்த சண்டையை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதும் வழக்கம். ரகசியமாக நடந்த இந்த கத்தி சேவல் சண்டை குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அப்போது போலீஸ் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கிருந்து சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். அதை கண்ட போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பின் அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

இதனைத் தொடர்ந்து, ஜோதிநாதன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரட்டியதால் தான் ஜோதிநாதன் இறந்ததாக கூறி அவரது குடும்பத்தார், கடலாடி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசாரை கண்டித்து கடலாடி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமரசம் செய்ய போலீசார் எடுத்த முயற்சிகள் எடுபடாத நிலையில், தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தங்களுக்கும் ஜோதிநாதன் இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், ஜோதிநாதனின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேவல் சண்டை பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், அதை காரணம் காட்டி போலீசார் கறார் காட்டி விரட்டியதாகவும், அதனால் அப்பாவி ஒருவர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். விவசாயியான ஜோதிநாதனின் இறப்பு அவரது குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ள நிலையில், போலீசார் விரட்டியதில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களின் உறவினர்களும் போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராம மக்களை சமரசம் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சம்பவம் தொடர்பான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கியுள்ளார். வேறு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கடலாடி காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
Embed widget