மேலும் அறிய

சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார்.

ராமநாதபுரம், மாவட்டம் கடலாடி அருகே ஆ.புனவாசல் கண்மாய் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.  சேவலின்  காலில் கத்தியை கட்டி, மோதவிடும் இந்த சண்டையில் சேவல் உயிரிழக்கும் அளவிற்கு போட்டி கடுமையாக இருக்கும். இந்த சண்டையை மையமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதும் வழக்கம். ரகசியமாக நடந்த இந்த கத்தி சேவல் சண்டை குறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அப்போது போலீஸ் வருவதை கண்ட போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கிருந்து சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். அதை கண்ட போலீசார், குழுக்களாக அவர்களை விரட்டத் தொடங்கினர். ஆ.பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜோதிநாதன் (45) என்பவரை போலீசார் விரட்டிய போது, சிறிது தூரம் ஓடிய அவர் கீழே விழுந்துள்ளார். அதன் பின் அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


சேவல் கத்தி சண்டை: போலீசார் விரட்டியதில் விவசாயி பரிதாபமாக பலி!

இதனைத் தொடர்ந்து, ஜோதிநாதன் இறப்பு குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரட்டியதால் தான் ஜோதிநாதன் இறந்ததாக கூறி அவரது குடும்பத்தார், கடலாடி காவல் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசாரை கண்டித்து கடலாடி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமரசம் செய்ய போலீசார் எடுத்த முயற்சிகள் எடுபடாத நிலையில், தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. தங்களுக்கும் ஜோதிநாதன் இறந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், ஜோதிநாதனின் உறவினர்கள் அதை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சேவல் சண்டை பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், அதை காரணம் காட்டி போலீசார் கறார் காட்டி விரட்டியதாகவும், அதனால் அப்பாவி ஒருவர் உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். விவசாயியான ஜோதிநாதனின் இறப்பு அவரது குடும்பத்தாரை கடுமையாக பாதித்துள்ள நிலையில், போலீசார் விரட்டியதில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களின் உறவினர்களும் போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிராம மக்களை சமரசம் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சம்பவம் தொடர்பான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கியுள்ளார். வேறு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கடலாடி காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget