மேலும் அறிய

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே போலீஸ்காரருடன் கள்ளக்காதல் - மகளை எரித்து கொன்ற பெற்றோர்

''கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததால் ஆத்திரத்தில் நானும் எனது கணவரும் மூச்சை பிடித்து அமுக்கி கொலை செய்தோம் என அதிர்ச்சி வாக்குமூலம்''

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கௌசல்யாவுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  இருவருக்கும் குழந்தை இல்லாவிட்டாலும்  திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நடந்து வந்த நிலையில் கௌசல்யா உடன் பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரிப் பருவத்தில் நண்பராய் இருந்த காவலர் பார்த்திபனை ராமநாதபுரத்தில் சந்தித்துள்ளார் கௌசல்யா. அப்போது அவரது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு சென்ற அந்த காவலர் பார்த்திபன்  தினமும் அவருடன் பேசி வந்துள்ளார். இதனை கண்ட கௌசல்யாவின் கணவர் கனகராஜ் இதனை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களுடைய செல்போன் உரையாடல் நிற்கவில்லை. இதனால் கனகராஜ்க்கும் கௌசல்யாவுக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது நண்பரான பார்த்திபனிடம்  தான் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் நிம்மதியாக வாழ முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.


ராமநாதபுரம்: பரமக்குடி அருகே போலீஸ்காரருடன் கள்ளக்காதல் - மகளை எரித்து கொன்ற பெற்றோர்

உடனே அந்த காவலர் என்னோடு வந்து விடு சந்தோசமாக வாழலாம் என கூறி அழைத்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கௌசல்யா மதுரையில் தனது நண்பரான காவலர் பார்த்திபனுடன்  வாழ்ந்து வந்துள்ளார். தனது மனைவி காணாமல் போனது குறித்து கனகராஜ் சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சத்திரக்குடி போலீசார் கௌசல்யா சென்ற கார் நம்பரை வைத்து அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என அறிந்து அவரைச் சத்திரக்குடி காவல் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு கனகராஜ் மற்றும் கௌசல்யாவின் குடும்பத்தினரை  வரவழைத்து இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது என்றும் சிறிது காலம் உன் பெற்றோருடன் சென்று  அவர்களுடன் இருந்து வர புத்திமதி கூறி, அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.


ராமநாதபுரம்: பரமக்குடி அருகே போலீஸ்காரருடன் கள்ளக்காதல் - மகளை எரித்து கொன்ற பெற்றோர்

மேலும் கனகராஜ் கோபம் தீர்ந்தவுடன் அவருடன் சமாதானமாகப் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் எனவும் கூறியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட கௌசல்யா தனது பெற்றோருடன் நண்டுப்பட்டியில்  கடந்த 4 மாத காலமாக வசித்து வந்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து தனது கள்ளக் காதலனான காவலருடன் அவர் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென கௌசல்யா எலி மருந்தை சாப்பிட்டு மயக்க நிலையில் வீட்டில் இருந்துள்ளார். வயல்வெளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்கள் மயக்கநிலையில் இருந்த கௌசல்யாவை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இரண்டு நாட்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கௌசல்யாவை அவரது பெற்றோர் மருத்துவமனையில் தகவல் தெரிவிக்காமலேயே வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அழைத்து வந்த மறுநாள் மீண்டும் கௌசல்யா எலி மருந்தை சாப்பிட்டு இறந்ததாகவும் இதனை யாரிடமும் தெரிவிக்காமல் இவர்களே கௌசல்யாவை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கால்வாய் பகுதியில் உடலை எரித்துள்ளனர்.


ராமநாதபுரம்: பரமக்குடி அருகே போலீஸ்காரருடன் கள்ளக்காதல் - மகளை எரித்து கொன்ற பெற்றோர்

இதுகுறித்து தகவலறிந்த அன்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஏன் எங்களுக்கு தகவல் சொல்லாமல் இப்படி செய்தீர்கள் எனக்கேட்டதுடன்  காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து நண்டுப்பட்டி கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள கிராமத்தினரிடம் விசாரணை செய்தனர். பின்பு கௌசல்யாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்த சாம்பல் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக கௌசல்யாவின் பெற்றோரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் அங்கு போலீசார் விசாரித்ததில் தொடர்ந்து எங்களது பேச்சைக் கேட்காமல் குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அவள் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததால் ஆத்திரத்தில் நானும் எனது கணவரும் மூச்சை பிடித்து அமுக்கி கொலை செய்தோம் என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தாய் அமிர்தவல்லி மற்றும் தந்தை தென்னரசு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். நடத்தை சரியில்லாததால் பெற்ற மகளையே பெற்றோர்கள் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேர் கைது
Breaking News LIVE: சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேர் கைது
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேர் கைது
Breaking News LIVE: சென்னையில் 4.17 கிலோ போதைப்பொருள் கடத்திய 9 பேர் கைது
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget