மேலும் அறிய

இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்: தங்கத்துக்கு நிகரான பீடி இலை

வாகனத்தில் 30 கிலோ எடையுள்ள ஏழு சாக்கு மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

பீடி சுற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் இலை இந்தியாவில் மத்திய பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே பயிரிடப்படுவதால் அங்கிருந்து மலிவாக கிடைக்கிறது. பீடியின் உள்ளே வைக்கப்படும் புகையிலை கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் 'சீலா மீன்பாடு' என்ற கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 2 டன் எடை கொண்ட பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்ததுடன், சரக்கு வாகனத்தில் வந்து தப்பியோடியவர்கள் குறித்துஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் மரைன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இங்கு விலை குறைந்து இலங்கையில் நல்ல விலைக்கு விற்கப்படும் பொருள்களில் ஒன்றாக இந்தியாவின் பீடியும் இருக்கிறது. எனவே பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் இந்திய உணவு பொருள்கள் மருந்து பொருட்களுக்கு மட்டுமின்றி, புகையிலை பொருள்களுக்கும் படு கிராக்கி உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடத்தல் காரர்கள் இங்கிருந்து மலிவாக கிடைக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி இலங்கைக்கு கடத்தி, அதெற்கு மாறாக அங்கிருந்து தங்க கட்டிகளை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.


இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்: தங்கத்துக்கு நிகரான பீடி இலை

இலங்கையை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து தினந்தோறும் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்திய கடலோர படையும் தமிழக கடலோர காவல் படையும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி கடத்தல் காரர்கள் ஹீரோவாகவே இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், வாலிநோக்கம் கடலோரத்தில் சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்த கொண்டு செல்லப்பட்ட  இரண்டு டன் பீடி இலைகளை குற்றப்புலனாய்வு  போலீசாருடன் இணைந்து கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை, தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், இங்கு குறைந்த விலையிலும், அங்கு அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் அனைத்தும் சட்டவிரோத கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏர்வாடி பகுதியை ஒட்டியுள்ள வாலிநோக்கம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இந்தத் தகவலை அடுத்து அங்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கடலோரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது அந்த வாகனத்தில் 30 கிலோ எடையுள்ள ஏழு சாக்கு மூட்டைகளில் பீடி இலைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. உடனே அவைகளை கைப்பற்றிய அதிகாரிகள் இது தொடர்பாக இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது. இந்த பீடி இலைகள்  எங்கிருந்து கொண்டு வரப்பட்டது வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்ற குற்றவாளிகள் யார் என, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget