மேலும் அறிய

அடப்பாவிகளா...! உங்கள நம்பி கார் குடுத்தா இப்புடியா பண்ணுவிங்க...! - வாடகை காரை அடமானம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

கார்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கூடுதலாக கிடைக்கும் வாடகைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி  நபர்களிடம் தங்களது கார்களை ஒப்படைக்க வேண்டாம் என காவல்துறை அறிவுரை

ராமநாதபுரம் பாம்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் முனியசாமி 45. டிரைவரான இவர், சாயல்குடி அருகேயுள்ள ஒப்பிலான் மாரியூரை சேர்ந்த முகமது யாசின் என்பவரது காரை கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பெற்று ஓட்டி வந்தார். இந்த நிலையில் கடந்த  அக்டோபர் 3 ஆம் தேதி முனியசாமி வீட்டில் இருந்த போது ராமநாதபுரம் கோட்டை மேட்டு தெருவை சேர்ந்த  பிச்சை மகன் சுப்பிரமணியன் (27,) சிகில்ராஜவீதி முனியசாமி மகன் கார்த்திக் 30, ஆகியோர் 'வாடகைக்கு கார் வேண்டும்', என்று எடுத்து சென்றுள்ளனர். அதற்கு பிறகு அவ்வப்போது ரூ.5000, ரூ.10,000 என இதுவரை ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளனர். ஆனால், முழுமையான வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால், அவரிடம்  விசாரித்த போது கார்த்திக்கின்  அண்ணன் இளையராஜா (39,) என்பவரிடம் காரை கொடுத்து மதுரையில் சீட்டு விளையாடுவதற்காக காரை அடகு வைத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதையறித்து அதிர்ச்சியான முனியசாமி போலீசில் புகார் அளித்தார்.


அடப்பாவிகளா...! உங்கள நம்பி கார் குடுத்தா இப்புடியா பண்ணுவிங்க...! - வாடகை காரை அடமானம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

புகாரின் பேரில், ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்கு பதிந்து சுப்பிரமணி, கார்த்திக், இளையராஜா ஆகிய மூவரையும் கைது செய்தார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூவரும் இதுபோல் 19 பேரிடம் கார்களை வாடகைக்கு பெற்று சீட்டு விளையாடுவதற்காக மதுரையில் அடகு வைத்திருப்பது தெரிய வந்ததும் போலீசாரும் ஷாக்காகிப்போனார்கள். இது குறித்து காவல்துறையினர் நம்மிடம்  கூறுகையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராமநாதபுரம் பாம்பன் சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவர் தன்னுடைய கார் வாடகைக்கு கொடுத்த நபரிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி புகார் மனு ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டதில், இது போன்று பல கார்கள் வாடகைக்கு எடுத்து  வாடகை வராதது தெரிய வந்திருக்கிறது. 


அடப்பாவிகளா...! உங்கள நம்பி கார் குடுத்தா இப்புடியா பண்ணுவிங்க...! - வாடகை காரை அடமானம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

இதனை அடுத்து இது தொடர்பாக சிறப்பு படை அமைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  முதற்கட்ட விசாரணையில் ராமநாதபுரம் சிகில்ராஜ வீதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் பல நபர்களிடம் இதுபோன்று கார்களை வாடகைக்கு எடுத்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் போன்ற நகரங்களில் இந்த கார்களை விற்பனையும் ,அடகு வைத்ததும்  தெரிய வந்திருக்கிறது. அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் இவருடன் சேர்ந்து இளையராஜா, கார்த்திக், சுப்பிரமணி ஆகிய மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம்  இருந்து 16 கார்களை பறிமுதல் செய்து  ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டனர்.  மேலும், கார்களின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களைக் காட்டி எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவித்தினர். மேலும் நம்மிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கும்போது, கார்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கூடுதலாக கிடைக்கும் வாடகைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி  நபர்களிடம் தங்களது கார்களை ஒப்படைக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget