மேலும் அறிய

போலீஸ் ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

காவல் நிலையம் எதிரே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த துணிகர திருட்டு சம்பவம் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அருகே தவளக்குப்பம் காவல் நிலையம் எதிரே அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் திருடிச்சென்றார். புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த பூரணாங் குப்பத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 51). இவர் தவளக்குப்பம் காவல்  நிலையம் எதிரே கடலூர் புதுச்சேரி சாலையோரம் வாடகை பாத்திரக் கடை வைத்துள்ளார். அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் அவர் வசித்து வருகிறார்.

Vellore: உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராமம்..காரணம் என்ன?

 


போலீஸ் ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

இந்த நிலையில்  வழக்கம் போல் கடையை திறக்க நாராயணன் வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது போல் இவரது கடையை ஒட்டியுள்ள ஜூஸ் கடை, மளிகை கடை, பர்னிச்சர் கடை என அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து  திருடு நடந்திருப்பது தெரியவந்தது.


போலீஸ் ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

 

இது குறித்து தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டை உடைத்து திருடியது பதிவாகி இருந்தது. அதனைக் கொண்டு அந்த மர்ம நபரை அடையாளம் கண்டு அவரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 


போலீஸ் ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை!

 

Jayakumar: ஸ்டாலின், கனிமொழி ஏன் பிரசாரத்திற்கு போகல? ஜெயகுமார் சரமாரி கேள்வி

காவல் நிலையம் எதிரே அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த துணிகர திருட்டு சம்பவம் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அரியாங்குப்பம் அடுத்தடுத்து கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு தவளக்குப்பம் திருட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து இது போன்ற கடைகளில் பூட்டை உடைத்து திருடி வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Kanyakumari: தொடர் கனமழை...ஆர்ப்பரித்து கொட்டும் திற்பரப்பு அருவி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Embed widget