மேலும் அறிய

நாராயணசாமி வீட்டில் ‘பைப்’ வெடிகுண்டு வைத்த வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் ‘பைப்’ வெடிகுண்டு வைத்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டு, ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி எல்லையம்மன் கோயில் தெருவில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு உள்ளது. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி அவரது வீடு முன் நிறுத்தி இருந்த ஒரு காருக்கு அடியில் மர்ம பொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சோதித்து பார்த்ததில் ஒரு அடிநீள இரும்பு பைப் இருபுறமும் அடைக்கப்பட்டு, மின்சார வயரால் இணைக்கப்பட்டிருந்தது.


நாராயணசாமி வீட்டில் ‘பைப்’ வெடிகுண்டு வைத்த வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இதுகுறித்து தகவல் அறிந்துஅப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த காமராஜ் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அது ‘பைப்’  வெடிகுண்டு வகை என்பதை உறுதி செய்தனர். இதன்பின் அந்த குண்டு பாதுகாப்பாக செயல் இழக்க வைக்கப்பட்டது. இதுதொடர்பாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதைத்தொடர்ந்து நாராயணசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரின் வீட்டை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில்,  தமிழர் விடுதலை படையை சேர்ந்த சிவகங்கை திருசெல்வம் என்ற குமார் (வயது44), தங்கராஜ் என்ற தமிழரசன் (43) கவியரசன் என்ற ராஜா (37), கலைலிங்கம் என்ற கலை (45), ஜான் மார்ட்டின் என்ற இளந்தழல் (31), மதுரை கார்த்தி என்கிற ஆதி (36) ஆகியோ கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தமிழகத்திலும் வழக்குகள் உள்ளதால் சேலம் சிறையில் திருச்செல்வம், சென்னை புழல் சிறையில் தங்கராஜ், வேலூர் சிறையில் கார்த்தி அடைக்கப்பட்டனர். கடலூர் சிறையில் கவியரசன், கலைலிங்கம், ஜான் மார்ட்டின் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.


நாராயணசாமி வீட்டில் ‘பைப்’ வெடிகுண்டு வைத்த வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமையில் நடந்து வந்தது. இதுதொடர்பாக 54 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இந்தச் சூழலில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி, வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


நாராயணசாமி வீட்டில் ‘பைப்’ வெடிகுண்டு வைத்த வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கொரோனா  கட்டுப்பாடு  காரணமாக காணொலி மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, ‘பைப்’ குண்டு வைத்த வழக்கில் திருச்செல்வம், தங்கராஜ், கவியரசன், கலைலிங்கம், கார்த்தி, ஜான் மார்ட்டின் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கான தண்டனை விவரம் மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படுமென கூறினார்.

அதன்படி மதியம் நீதிமன்றம் ஆரம்பித்ததும்,  ‘பைப்’ வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்செல்வம், கவியரசன், கலைலிங்கம், கார்த்தி, ஜான் மார்ட்டின் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தங்கராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும்,  திருசெல்வத்திற்கு மட்டும் ரூ.3 ஆயிரம், மற்ற 5 பேருக்கு தலா ரூ.3,500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget