மேலும் அறிய

“வாழ பிடிக்காமல் தற்கொலைக்கு முயன்றேன்”- கடலில் குதித்த கைதி பரபரப்பு வாக்குமூலம்

கைதியிடம் சிறையில் அமைச்சு பணியாளர்களும், வார்டன்களும் பணம் கேட்டு டார்ச்சர் செய்தது தெரியவந்தது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (35) என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 நாட்கள் பரோலில் சென்ற அவர் தலைமறைவானார். சிறைக்கு வந்த அவரை வார்டன் ராமகிருஷ்ணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை பீர்க்கங்கரனை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் 15 மாதங்களுக்குப் பிறகு திருச்செந்தூரில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைதி ஹரி கிருஷ்ணனை கைது செய்தனர்.

பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதே நேரத்தில் கைதியிடம் சிறையில் அமைச்சுபணியாளர்களும், வார்டன்களும் பணம் கேட்டு டார்ச்சர் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை கைதி ஹரி கிருஷ்ணன் அனுப்பியிருந்தார். இதையடுத்து நான்கு பேருக்கும் மெமோ அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் சிறையில் உள்ள கைதி ஹரி கிருஷ்ணனை கோவை சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது உண்மைதானா? அதில் இருக்கும் தகவல்கள் உண்மையா என விசாரணை நடத்தினர். அப்போது தன்னிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்தது அனைத்தும் உண்மை என கைதி தெரிவித்துள்ளார். 

“வாழ பிடிக்காமல் தற்கொலைக்கு முயன்றேன்”- கடலில் குதித்த கைதி பரபரப்பு வாக்குமூலம்

சிறையில் இருந்து தப்பி செல்லும் போது கூட நான்கு பேருக்கு பணம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தப்பி சென்று அன்று சேலம் மாநகர் அன்னதானப்பட்டியில் உள்ள ரவுடி இடம் 15,000 பணத்தை வாங்கிக்கொண்டு, ராசிபுரத்தில் உள்ள ரவுடியின் வீட்டில் தங்கியுள்ளார். அதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடலுக்கு சென்று தற்கொலை செய்வதற்காக கையை அறுத்துக் கொண்டு, கடலில் குதித்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு பேர் அவரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குணமான நிலையில் யாருக்கும் தெரியாமல் மேட்டுப்பாளையம் வந்து கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறியுள்ளார். பரோலில் சென்றது குறித்து விசாரணை நடத்தியதில் கைதி ஹரிகிருஷ்ணன் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்வதற்காக தான் பரோலில் சென்றேன் என்று கூறியுள்ளார். மேலும் பணம் கொடுத்தது இரண்டு சிறை வார்டன்கள், இரண்டு அமைச்சுப் பணியாளர்கள் என்பதும் ஹரி கிருஷ்ணன் கூறிய நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் சேலம் மத்திய சிறை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரியவந்தால் நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?
Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?
Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
China, Canada Complaint: ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
TN Weather: தமிழகத்தில் 4 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை! நாளை இந்த பக்கம்லாம் போகாதீங்க! இன்று அதிக வெயில் எங்கே?
TN Weather: தமிழகத்தில் 4 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை! நாளை இந்த பக்கம்லாம் போகாதீங்க! இன்று அதிக வெயில் எங்கே?
Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!
Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!
செம ஆஃபர்! ஒரே நாளில் Chat GPT கற்றுக்கொள்ள வேண்டுமா? அரசு கொடுக்கும் பயிற்சி! முன் பதிவு அவசியம்
செம ஆஃபர்! ஒரே நாளில் Chat GPT கற்றுக்கொள்ள வேண்டுமா? அரசு கொடுக்கும் பயிற்சி! முன் பதிவு அவசியம்
Embed widget