மேலும் அறிய

கஞ்சா வழக்கில் காவல் துறை மிரட்டல்; சென்னையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

கஞ்சா விற்பவர்கள் பற்றிய தகவல் கொடுக்கவில்லை என்றால் தன் கணவரையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டுவதாக காவல் ஆணையரக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி.

கஞ்சா வழக்கில் கைது என மிரட்டல்

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் திவ்யா மற்றும் தினேஷ்,  திவ்யா கணவர் திணேஷ் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வியாசர்பாடி காவல் நிலையத்தில் உள்ள இரண்டு காவலர்கள் தன் கணவரிடம் தொடர்ந்து மிரட்டும் தொனியில் பேசி வருவதாக கூறி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார்.

அப்பொழுது, தன் கைப் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அப்பகுதியில் இருந்த காவலர்கள் திவ்யா உடல் மீது தண்ணீர் ஊற்றினர்.

அப்பொழுது பேசிய அவர்,

வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும் , இல்லையென்றால் தன் கணவர் மீது பொய் வழக்கு போட்டு விடுவதாக காவல் துறையினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். கஞ்சா விற்பவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொள்ள வேண்டிய காவல் துறையினர், இது போன்று மிரட்டும் செயலில் ஈடுபடுவது தன் குடும்பத்தினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட திவ்யா வேதனை தெரிவித்துள்ளார்.

வீடு கட்டுமானத்திற்கு கொடுத்த  பணத்தை, லட்சக் கணக்கில் மோசடி செய்த நபர்

சென்னை பெரம்பூர் கோபால் காலனி மேற்கு மெயின் ரோட்டில் வசித்து வரும் ராபர்ட் வில்லியம் ( வயது 62 ) என்பவர், தான் வெளிநாட்டு இந்தியர் என்றும் தனக்கு சொந்தமாக மடிப்பாக்கம் பகுதியில் உள்ள நிலத்தில் வீடு கட்டுவதற்கான பொறுப்பை தனது சகோதரி மகன் ஜேசு ஆனந்த் என்பவரிடம் கொடுத்ததாகவும் , இதற்காக ஜேசு ஆனந்த் தன்னிடம் அதிகமான பணம் கேட்டு பெற்று பாதி பணத்தை அபகரித்ததாகவும் , மேலும் வீட்டின் நான்கு குடியிருப்புகளை தனக்கு தெரியாமல் 4 நபர்களுக்கு ரூ.8 லட்சம், 8.5 லட்சம், 9 லட்சம், 6.5 லட்சம் என மொத்தம் ரூ.32 லட்சம் பணத்திற்கு குத்தகைக்கு விட்டு மோசடி செய்துள்ளதாகவும் , S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின் பேரில் , காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வேலூர் பகுதியில் பதுங்கியிருந்த இவ்வழக்கில் தொடர்புடைய ஜேசு ஆனந்த் ( வயது 38 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள், 1 லேப்டாப், போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஜேசு ஆனந்த் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget