மேலும் அறிய

‛மஜா’ சென்டர்களாக மாறி வரும் மஜாஜ் சென்டர்கள்... கொத்து கொத்தாக மீட்கப்படும் பெண்கள்!

புதுச்சேரி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 பெண்கள் மீட்கப்பட்டனர். 9 பேர் கைது

புதுச்சேரி மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 பெண்கள் மீட்கப்பட்டனர். 9 பேர் கைதானார்கள். புதுச்சேரியில் சுற்றுலா நகரமாக திகழ்வதால் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம், அழகு நிலையம், மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா சென்டர்களில் விபசார தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

 ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

இதையடுத்து அவ்வப்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு விபசாரத்தில் ஈடுபடுவோரையும், பெண்களையும் மீட்டு வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து இந்த தொழில் கொடி கட்டி பறந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்களில் சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றுள்ள லோகேஷ்வரன்  சோதனை நடத்த உத்தரவிட்டார்.


‛மஜா’ சென்டர்களாக மாறி வரும் மஜாஜ் சென்டர்கள்... கொத்து கொத்தாக மீட்கப்படும் பெண்கள்!

அதன் பேரில் சிறப்பு அதிரடி படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் உருளையன் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மறைமலையடிகள் சாலையில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் தொழில் நடந்தது தெரியவந்தது. அதையடுத்து அங்கிருந்த 3 இளம் பெண்களை போலீசார் மீட்டனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த கணவன் மனைவி உள்பட 2 வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.‛மஜா’ சென்டர்களாக மாறி வரும் மஜாஜ் சென்டர்கள்... கொத்து கொத்தாக மீட்கப்படும் பெண்கள்!

அதே போல் அண்ணா நகரில் ஒரு வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 4 அழகிகளையும் போலீசார் மீட்டனர். அங்கு விபசாரம் தொழில் நடத்தி வந்த கணவன் மனைவி, 2 வாடிக்கையாளர்களையும் போலீசார் கைது செய்தனர். கோரிமேடு போலீஸ் சரகம் காமராஜ் சாலையில் செயல்பட்ட மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக 3 பெண்களை மீட்டனர். அந்த மசாஜ் சென்டர்  உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் 3 இடங்களில் நடந்த சோதனையில் 10 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மசாஜ் சென்டர் நடத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய அதன் உரிமையாளர்கள் 5 பேர், வாடிக்கையாளர்கள் 4 பேர் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய இந்த சோதனையால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் சமீபமாக மஜாஜ் சென்டரில் மஜா சேவை நடந்து வருவது அம்பலமாகி வருகிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து  இதற்காக பெண்கள் அழைத்து வரப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது முடிவுக்கு வர வேண்டும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்
லாட்ஜில் காதலனுடன் போதை ஊசி செலுத்தி சிறுமி உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
நெல்லையில் அதிசயம்: தமிழகத்தில் மட்டுமே உள்ள 'ஜோதி ஆஞ்சநேயர்' திருக்கோலம்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Embed widget