மேலும் அறிய

தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத்தில் பங்கு: பெண்ணிடம் 5 கோடியே 60 லட்சம் மோசடி - குடும்பத்துடன் எஸ்கேப்பான தொழிலதிபர்

ஓசூர் அருகே தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறி, பெண்ணிடம் 5 கோடியே 60 லட்சம் மோசடி செய்ததாக, ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பழைய மத்திகிரியை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி வயது (46). இவர்கள் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

ஜெயலட்சுமியுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில், கடந்த 2015ம் ஆண்டு ரவிச்சந்திரன், தனது தொழிலில் பங்குதாரராக சேர்ந்து கொண்டால், நாம் செய்யும் தொழிலில் இருந்து வரும் லாபத்தில் பங்கு தருவதாக ஜெயலட்சுமியிடம் கூறியதாக தெரிகிறது. அதை நம்பிய ஜெயலட்சுமி 50 லட்சம் ரவிசந்திரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 


தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத்தில் பங்கு: பெண்ணிடம் 5 கோடியே 60 லட்சம் மோசடி - குடும்பத்துடன் எஸ்கேப்பான தொழிலதிபர்

 

பின்னர் இவர்கள் இருவரும் தொழில் நடத்தி வந்துள்ளனர். அதில் ரவிச்சந்திரன் அவருக்கு லாபத்தில் பங்கு அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து ரவிச்சந்திரனின் நண்பர்களிடம் இருந்தும் மற்றும் தெரிந்தவர்களிடம் நாம் செய்யும் தொழிலைப் பற்றி  கூறி பணம் பெற்று கொடுத்தால் உனக்கு அதிக அளவில் லாபத்தில் இருந்து பங்கு தருகிறேன் என கூறியுள்ளார். இதனால், பணம் ஆசை கொண்ட ஜெயலட்சுமி தன்னுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இருந்து செய்யும் தொழிலை பற்றியும் லாபம் அதிகம் வரும் என கூறியும் அவர்களிடம் இருந்து வங்கி பண பரிவர்த்தனை மூலமாக 5 கோடியே 60 லட்சம் பணம் பெற்று, ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பணத்தை பெற்றுக் கொண்ட  தொழிலதிபர் ரவிச்சந்திரன், அதன் பிறகு தொழிலில் இருந்து பெறப்படும்  லாபத்தில் இருந்து சரிவர பணம் தரவில்லை. இது குறித்து ஜெயலட்சுமி  ரவிசந்திரனிடம் கேட்டபோது பணம் கொடுப்பதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

 

 


தொழிலில் பங்குதாரராக இணைந்தால் லாபத்தில் பங்கு: பெண்ணிடம் 5 கோடியே 60 லட்சம் மோசடி - குடும்பத்துடன் எஸ்கேப்பான தொழிலதிபர்

 

இந்தநிலையில், ரவிச்சந்திரனை தேடி ஜெயலட்சுமி பணம் கேட்பதற்காக ரவிச்சந்திரன் வீடடிற்கு சென்றார். அங்கு ரவிச்சந்திரன் குடும்பத்துடன் மாயமானதை கண்டு ஜெயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, ஜெயலட்சுமி கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு துணை காவல்கண்காணிப்பாளர் ஈஸ்வர மூர்த்தி தொழிலதிபர் ரவிச்சந்திரன், அவரது மனைவி லதா, மகன் ராகுல் மற்றும் மருமகன் சுபாஷ் ஆகிய 4 நபர்கள் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் பணம் மோசடி செய்த நபர்களை விரைவில் பிடித்து விடுவதாகவும் காவல்துறையினர்  அவர்களை தேடி வருவதாகவும் ஜெயலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். பெண்ணிடம் பணம் ஆசையை காட்டி  அதிக அளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிய சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget