மேலும் அறிய

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் ஜேப்படி திருடர்கள் கைவரிசை.. பறிபோன பர்ஸ்கள்

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நேற்று ஜெ. நினைவிடத்திறகு சசிகலா வந்தபோது ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை தாராளமாகக் காட்டியதில் 20 பேரின் பர்ஸ் பறிபோனது.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நேற்று ஜெ. நினைவிடத்திறகு சசிகலா வந்தபோது ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை தாராளமாகக் காட்டியதில் 20 பேரின் பர்ஸ் பறிபோனது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் உள்ளது. இங்கு நேற்று சசிகலா அஞ்சலி செலுத்தவந்தார். அப்போது அவருடன் ஏராளமான தொண்டர்களும் வந்திருந்தனர். ஜெ. நினைவிடமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புக்காக ஜெ. நினைவிடத்தில் 3000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொண்டர்கல் புடைசூழ வந்த சசிகலா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் கண்கலங்க அவரைப் பார்த்து தொண்டர்கள் குரல் எழுப்ப அந்த இடமே சில நிமிடங்கள் உணர்சிப் பூர்வமாக மாறியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி 20 பேரிடம் ஜேப்படி திருடர்கள் கைவரிசையைக் காட்டினர். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரித்து வருகிறார்.


கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் ஜேப்படி திருடர்கள் கைவரிசை.. பறிபோன பர்ஸ்கள்

சசிகலா வியூகம் என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் அவர் விடுதலையானார். அவரது விடுதலையால் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும், அதிமுக அமமுக இணையும், தேர்தல் கூட்டணிகள் மாறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். அனைவரும் ஒற்றுமையுடன் ஜெயலலிதா ஆட்சி அமைய உழைக்க வேண்டும் என்றொரு அறிக்கை வெளியிட்டார். தேர்தலில் அதிமுக வெற்றிக்காக அவர் அவ்வாறு தெரிவித்ததாகவே கூறப்பட்டது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பின்னர் சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலும் அவர் அதிமுகவை மீட்பது பற்றியே பேசியிருக்கிறார். இந்நிலையில் அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

ஆனால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை எதிர்ப்பதில் அதிமுகவில் ஜெயக்குமார் தான் இன்னும் அதிதீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் ஓபிஎஸ் மனைவி மறைவின்போது சசிகலா நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அதிமுகவில் எப்படியாவது நுழைந்துவிட சசிகலா தொடர்ந்து முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரது வியூகம் முழுக்க அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாகவே இருக்கிறது என சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க :

ஓபிஎஸ், இபிஎஸ் கண்களைப்போல கழகத்தை காக்கவேண்டும் - அதிமுக பொன்விழாவுக்கு அண்ணாமலையின் வாழ்த்து

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
Weapons: இந்தியா இல்லை.. அமெரிக்காவிடம் இருந்து ஆயுங்களை வாங்கி குவிக்கும் நாடு பற்றி தெரியுமா? ஏன்?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
Royal Enfield Super Meteor 650: ரக்கட் ஆன சூப்பர் மீடியோர் 650.. பைக் பற்றி அறிய வேண்டிய அம்சங்கள், வசதிகள் - விலை
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Embed widget