மேலும் அறிய

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் ஜேப்படி திருடர்கள் கைவரிசை.. பறிபோன பர்ஸ்கள்

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நேற்று ஜெ. நினைவிடத்திறகு சசிகலா வந்தபோது ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை தாராளமாகக் காட்டியதில் 20 பேரின் பர்ஸ் பறிபோனது.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நேற்று ஜெ. நினைவிடத்திறகு சசிகலா வந்தபோது ஜேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை தாராளமாகக் காட்டியதில் 20 பேரின் பர்ஸ் பறிபோனது.

சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் உள்ளது. இங்கு நேற்று சசிகலா அஞ்சலி செலுத்தவந்தார். அப்போது அவருடன் ஏராளமான தொண்டர்களும் வந்திருந்தனர். ஜெ. நினைவிடமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புக்காக ஜெ. நினைவிடத்தில் 3000 போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொண்டர்கல் புடைசூழ வந்த சசிகலா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர் கண்கலங்க அவரைப் பார்த்து தொண்டர்கள் குரல் எழுப்ப அந்த இடமே சில நிமிடங்கள் உணர்சிப் பூர்வமாக மாறியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி 20 பேரிடம் ஜேப்படி திருடர்கள் கைவரிசையைக் காட்டினர். இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அண்ணா சதுக்கம் போலீஸார் விசாரித்து வருகிறார்.


கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஜெயலலிதா நினைவிடத்தில் ஜேப்படி திருடர்கள் கைவரிசை.. பறிபோன பர்ஸ்கள்

சசிகலா வியூகம் என்ன?

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் அவர் விடுதலையானார். அவரது விடுதலையால் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும், அதிமுக அமமுக இணையும், தேர்தல் கூட்டணிகள் மாறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். அனைவரும் ஒற்றுமையுடன் ஜெயலலிதா ஆட்சி அமைய உழைக்க வேண்டும் என்றொரு அறிக்கை வெளியிட்டார். தேர்தலில் அதிமுக வெற்றிக்காக அவர் அவ்வாறு தெரிவித்ததாகவே கூறப்பட்டது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பின்னர் சசிகலா மீண்டும் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதில் பெரும்பாலும் அவர் அதிமுகவை மீட்பது பற்றியே பேசியிருக்கிறார். இந்நிலையில் அதிமுகவின் பொன்விழாவை ஒட்டி அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

ஆனால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலாவை எதிர்ப்பதில் அதிமுகவில் ஜெயக்குமார் தான் இன்னும் அதிதீவிரம் காட்டி வருகிறார். அண்மையில் ஓபிஎஸ் மனைவி மறைவின்போது சசிகலா நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். அதிமுகவில் எப்படியாவது நுழைந்துவிட சசிகலா தொடர்ந்து முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. அவரது வியூகம் முழுக்க அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதாகவே இருக்கிறது என சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க :

ஓபிஎஸ், இபிஎஸ் கண்களைப்போல கழகத்தை காக்கவேண்டும் - அதிமுக பொன்விழாவுக்கு அண்ணாமலையின் வாழ்த்து

தலைப்பு செய்திகள்

“ஆசிரமத்துக்கு சொத்தை எழுதி விடுவேன்”... ஆத்திரத்தில் தந்தையை வெட்டிய மகன்! தாயும் கைது!
“ஆசிரமத்துக்கு சொத்தை எழுதி விடுவேன்”... ஆத்திரத்தில் தந்தையை வெட்டிய மகன்! தாயும் கைது!
kallakurichi : பேய் என்ற பெயரில் மாணவிக்கு கொடூர சித்ரவதை! கற்பூரம், துடைப்பத்தால் தாக்கிய சக மாணவிகள்
kallakurichi : பேய் என்ற பெயரில் மாணவிக்கு கொடூர சித்ரவதை! கற்பூரம், துடைப்பத்தால் தாக்கிய சக மாணவிகள்
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
சிஎம் விஜய் பெயரில் ‘AI Deep Fake’ வீடியோ.! யார் அந்த குற்றவாளி- ராஜஸ்தானில் தட்டி தூக்கிய போலீஸ்
சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்
சாக்கு மூட்டையில் பெண் சடலம் !! 3 நாட்களாக பிணத்துடன் தங்கியிருந்த புரோட்டா மாஸ்டர்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
'இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சமாட்டேன் - திருப்பிக் கொடுப்பேன்’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!
EPF New Rule: தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
தொழில்துறை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.! EPF - சம்பள உச்சவரம்பை உயர்த்திய மத்திய அரசு.! எவ்வளவு தெரியுமா.?
Paranthaman DMK:
Paranthaman DMK: "நானும் விஜய் ரசிகன்தான்.." முதலமைச்சர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்ட திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
Vaaladi Karthik : ‘அன்பில் மகேஸின் வலதுகரம் - குறி வைத்த போலீஸ்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
‘குறி வைத்த போலீஸ் – அன்பில் மகேஸின் வலதுகரம்’ யார் இந்த வாளாடி கார்த்திக்..?
Anbil Mahesh Case : 'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
'அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட அறிக்கை..!
Iran Vs Saudi Vs America: ட்ரோன், ஏவுகணைகளால் சவுதியை புரட்டி எடுக்கும் ஈரான்.! பீதியில் அமெரிக்கா.! குடிமக்களுக்கு வார்னிங்
ட்ரோன், ஏவுகணைகளால் சவுதியை புரட்டி எடுக்கும் ஈரான்.! பீதியில் அமெரிக்கா.! குடிமக்களுக்கு வார்னிங்
Rain Alert: இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பொளக்கும் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
kN Nehru: ”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
”திமுகவினரை குறிவைத்து அடிக்கும் விஜய் அரசு” எல்லாவற்றிற்கும் நாங்கள் தயார் என கே.என். நேரு சவால்
Embed widget