மேலும் அறிய

Crime: பெரம்பலூர் ஆசிரியர் எரித்துக் கொலை....கைதானவர் பரபரப்பு தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு முன் மாயமான ஆசிரியை எரித்து கொலை, கைதான ஆசிரியர் திடுக்கிடும் தகவல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதேபள்ளியில் வேப்பந்தட்டையை சேர்ந்த இன்ஜினியர் பாலமுருகன் மனைவி தீபா(42) கணித ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் தகாத உறவுடன், பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வழக்கம்போல கடந்த நவம்பர் 15ம் தேதி பள்ளிக்குச் சென்ற இவர்கள் இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. தீபா மாற்றுத்திறனாளி என்பதால் தினமும் காரில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வீடு திரும்பாத கணவனை கண்டுபிடித்து தரும்படி ஆசிரியர் வெங்கடேசன் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் காணாமல் போன மனைவியை கண்டு பிடித்துத் தரும்படி இன்ஜினியர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் வி. களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நவம்பர் 29ம் தேதி தீபாவின் கார் கோவையில் மீட்கப்பட்டது. அதில் தீபாவின் தாலி, செல்போன், ஏடிஎம் கார்டுகள், ரத்தக் கறை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததால் ஆசிரியை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். ஆகையால் 5 தனிப்படையினர் ஆசிரியர் வெங்கடேசனை பல ஊர்களில் தேடிவந்தனர். ஆனால் கடந்த 85 நாட்களாக வெங்கடேசன் போலீசாருக்கு போக்குக்காட்டி வந்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் பெரம்பலூர் எஸ்எஸ்ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்எஸ்ஐ முகமது ஜியாவுதீன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


Crime: பெரம்பலூர் ஆசிரியர் எரித்துக் கொலை....கைதானவர் பரபரப்பு தகவல்

மேலும் குற்றவாளிக்கு உதவியதாக வெங்கடேசன் மனைவி காயத்ரி, மைத்துனர் பிரபு, உறவினர் ராஜா ஆகிய 3 பேரையும் கடந்த டிசம்பர் 29ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த ஆசிரியர் வெங்கடேசனை நேற்று போலீசார் கைது செய்து பெரம்பலூருக்கு கொண்டு வந்தனர். ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் வர்த்தகத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததுடன் தீபாவிடமும் லட்சக்கணக்கில் அவ்வப்போது பணம் பெற்றுள்ளார். மேலும், கொடுத்த பணத்தை கேட்டு தீபா தொந்தரவு செய்ததால் அவரை அழைத்து சென்று கொலை செய்து பிணத்தை எரித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து கொலை நடந்ததாக கூறப்படும் வி.களத்தூர் அருகேயுள்ள முருக்கன்குடி, கீழபுலியூர் பகுதிகளிலும், பிணத்தை எரித்ததாக கூறப்படும் புதுகை மாவட்ட பகுதிக்கும் வெங்கடேசனை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget