மேலும் அறிய

Crime: பெரம்பலூர் ஆசிரியர் எரித்துக் கொலை....கைதானவர் பரபரப்பு தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு முன் மாயமான ஆசிரியை எரித்து கொலை, கைதான ஆசிரியர் திடுக்கிடும் தகவல்..

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதேபள்ளியில் வேப்பந்தட்டையை சேர்ந்த இன்ஜினியர் பாலமுருகன் மனைவி தீபா(42) கணித ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் தகாத உறவுடன், பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வழக்கம்போல கடந்த நவம்பர் 15ம் தேதி பள்ளிக்குச் சென்ற இவர்கள் இருவரும் மாலையில் வீடு திரும்பவில்லை. தீபா மாற்றுத்திறனாளி என்பதால் தினமும் காரில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வீடு திரும்பாத கணவனை கண்டுபிடித்து தரும்படி ஆசிரியர் வெங்கடேசன் மனைவி காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதேபோல் காணாமல் போன மனைவியை கண்டு பிடித்துத் தரும்படி இன்ஜினியர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் வி. களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நவம்பர் 29ம் தேதி தீபாவின் கார் கோவையில் மீட்கப்பட்டது. அதில் தீபாவின் தாலி, செல்போன், ஏடிஎம் கார்டுகள், ரத்தக் கறை படிந்த சுத்தியல், அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததால் ஆசிரியை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். ஆகையால் 5 தனிப்படையினர் ஆசிரியர் வெங்கடேசனை பல ஊர்களில் தேடிவந்தனர். ஆனால் கடந்த 85 நாட்களாக வெங்கடேசன் போலீசாருக்கு போக்குக்காட்டி வந்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் பெரம்பலூர் எஸ்எஸ்ஐ பாண்டியன், வி.களத்தூர் எஸ்எஸ்ஐ முகமது ஜியாவுதீன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


Crime: பெரம்பலூர் ஆசிரியர் எரித்துக் கொலை....கைதானவர் பரபரப்பு தகவல்

மேலும் குற்றவாளிக்கு உதவியதாக வெங்கடேசன் மனைவி காயத்ரி, மைத்துனர் பிரபு, உறவினர் ராஜா ஆகிய 3 பேரையும் கடந்த டிசம்பர் 29ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த ஆசிரியர் வெங்கடேசனை நேற்று போலீசார் கைது செய்து பெரம்பலூருக்கு கொண்டு வந்தனர். ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் வர்த்தகத்தில் பல லட்சம் பணத்தை இழந்ததுடன் தீபாவிடமும் லட்சக்கணக்கில் அவ்வப்போது பணம் பெற்றுள்ளார். மேலும், கொடுத்த பணத்தை கேட்டு தீபா தொந்தரவு செய்ததால் அவரை அழைத்து சென்று கொலை செய்து பிணத்தை எரித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து கொலை நடந்ததாக கூறப்படும் வி.களத்தூர் அருகேயுள்ள முருக்கன்குடி, கீழபுலியூர் பகுதிகளிலும், பிணத்தை எரித்ததாக கூறப்படும் புதுகை மாவட்ட பகுதிக்கும் வெங்கடேசனை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget