மேலும் அறிய

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு முயற்சி: ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது!

போலி ஆவணம் தயாரித்து , அதன் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து , அதன் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்ப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் உள்ளது ஊஞ்சம்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு சங்கராபுரத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வாங்குவதற்காக கடந்த 2020ம் ஆண்டு பெரியகுலத்தைச் சேர்ந்த சந்தனபாண்டியன் முன்வந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டதன் அடிப்படையில் நிலத்தை வாங்க சந்திரசேகரனிடம், சந்தனபாண்டியன் ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார்.

ஆனால், ஒப்பந்தம் படி, சந்திரசேகரன் உரிய காலத்தில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரவில்லை. பத்திரப்பதிவை இழுத்தடித்து வந்ததால், சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். சந்தனபாண்டியன் தான் கொடுத்த முன்பணம் ரூ. லட்சத்தைப் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

பணம் பெற்றுக் கொண்டதோடு சந்தனப்பாண்டியன் நிற்கவில்லை. அந்த நிலத்தை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய மணவாளனுடன் இது குறித்துப் பேசியுள்ளார். மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் சந்திரசேகரனின் நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்துள்ளனர்.

அதன்படி சந்திரசேகரன் சந்தனப்பாண்டியனிடம் நிலம் விற்றதாகவும் அதற்காக சந்திரசேகரன் தன்னிடம் இருந்து ரூ.1.5 (ஒன்றரை கோடி) வாங்கியதாகவும் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
இதனையறிந்த சந்திரசேகரன் அதிர்ந்து போனார். இந்த ஆவணம் போலி என்றும் தனது நிலத்தை மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக கடந்த ஆண்டு தேனி மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவில் சந்திரசேகரன் புகார் அளித்தார்.

இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியராக வரும் மணவாளனை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். 

நில அபகரிப்புப் புகாரில் மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் நில அபகரிப்பு நடைபெறுகிறது. தனி நபர்கள் மற்றவர்களின் நிலங்களை அபகரித்து தங்கள் பெயருக்கு மாற்றி பதிவு செய்து வருகின்றனர். ஆந்திர பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் மாநிலங்களில் நில அபகரிப்பை தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டம் என்பது தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு அதிகரித்து வருகிறது. எனவே பிற மாநிலங்களை போல நில அபகரிப்பு தடுப்பு சட்டம் தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் நிலம் அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து நிலத்தை காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கையுடன் எண்ணற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
Embed widget