மேலும் அறிய

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... மைனர் சிறுவர்கள் நிகழ்த்திய கொடூரம்

சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தாலும், அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் வரை சிறுமி தனது பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை.

12 வயது மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பொறியியல் டிப்ளமோ மாணவர் உட்பட மூன்று மைனர் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறிக்கத் தவறிய சிறுவர்கள் கொடூரமான செயலின் வீடியோவை சமூக ஊடக தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாவட்டத்தின் ஜெனாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதே கிராமத்தில் வசிக்கின்றனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தாலும், அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் வரை சிறுமி தனது பெற்றோரிடம் விஷயத்தைத் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் வீடியோவை பார்த்து, இதுபற்றி அவரது தந்தைக்கு தெரிவித்தார். தந்தை மகளிடம் விசாரித்தபோது, ​​தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரித்தார்.


"பாதிக்கப்பட்டவரின் தந்தையின் புகாரைத் தொடர்ந்து, மூன்று சிறுவர்கள் மீது ஐபிசி, போக்சோ சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.


12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... மைனர் சிறுவர்கள் நிகழ்த்திய கொடூரம்

காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் 14-17 வயதுக்குட்பட்டவர்கள். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீடியோ கிளிப்பைப் பயன்படுத்தி மைனர் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளனர் என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். 20,000 ரூபாய் கொடுக்கவில்லை என்றால், அதை பகிரங்கப்படுத்துவேன் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மறுத்ததால், அவர்கள் வீடியோவை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டனர். அது வைரலானது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறார் நீதி  வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்

முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 10 கிலோ போதை பொருளை (Brown sugar) பறிமுதல் செய்த போலீசார், பாலசோர் மாவட்டத்தில் போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 6 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் சஹாதேவ்குண்டா காவல் நிலையத்திற்குட்பட்ட ஃபுலாடி அருகே ஒரு இடத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கிழக்கு ரேஞ்ச் ஐஜிபி ஹிமான்சு குமார் லால் மற்றும் எஸ்பி பாலசோர் சுதான்சு சேகர் சதாங்கி ஆகியோர் தெரிவித்தனர். போதை பொருள் கடத்தல் சம்பவம் குறித்து விரிவாக பேசியுள்ள எஸ்பி சுதான்சு சேகர் சதாங்கி, "11 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோவுக்கும் அதிகமான பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது. ஆறு பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக 6 பேர், உள்ளூரை சேர்ந்த 5 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget