மேலும் அறிய

ரயிலில் துளையிட்டு புடவைகள் கொள்ளை; 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!

கடந்த 2019ம் ஆண்டு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் துளையிட்டு கொள்ளையடித்து வடமாநில கொள்ளையனை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய ரயில்வே துறை பணிகள் சேவை மட்டுமின்றி, சரக்கு ரயில் போக்குவரத்து சேவையையும் மேற்கொண்டு வருகிறது. அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குகள் பார்சல் பெட்டியில் சுமார் 60 பார்சல்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பார்சல்களில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் இருந்தது.

இந்த ரெயில் மறுநாள் 15-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் சென்றபிறகு, ரயில்வே பணியாளர்கள் பார்சல் பெட்டியைத் திறக்க முயற்சித்தனர். ஆனால், அதன் கதவுகள் திறக்க முடியாமல் இருந்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் கதவை உடைத்த ரயில்வே ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ரயிலில் துளையிட்டு புடவைகள் கொள்ளை; 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!

அப்போது, பார்சல்கள் அனைத்தும் கலைந்து அதில் இருந்த புடவைகள் கொள்ளையடிக்கப்பட்ட இருந்தது. மேலும், பார்சல் பெட்டியின் மேலே ஒரு நபர் சென்று வரக்கூடிய அளவிற்கு துளை இருந்தது. அந்த துளையானது பார்சல் பெட்டிக்கு அருகில் இருந்த பயணிகள் பெட்டியின் கழிவறையில் சென்று முடிந்தது.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பயணிகள் பெட்டியின் கழிவறையின் மேல்பகுதியில் இருந்த பிளைவுட்டை கூர்மையான கத்தியால்  அறுத்து துளையிட்டு, அதன் வழியே ஊர்ந்து சென்று அருகில் இருந்த பார்சல் பெட்டிக்குள் இறங்கி, அங்கு 12 பார்சல்களில் இருந்த பட்டுப்புடவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். போலீசார் விசாரணையில் எந்தவொரு குழுவும் கிடைக்காமலே இருந்தது. அப்போது, இதுபோன்ற சம்பவம் வேறு ஏதேனும் ரெயில்களில் நடைபெற்றுள்ளதா என்று ரயில்வே போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, நாக்பூர்- வர்தா ரயில் நிலையங்களுக்கு இடையே இதேபோன்று ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றதை கண்டுபிடித்தனர்.


ரயிலில் துளையிட்டு புடவைகள் கொள்ளை; 2 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!

உடனடியாக அந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றபோது ரயிலில் பணிபுரிந்த பயணிகளின் செல்போன்களை சேகரித்தனர். மேலும், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை நடைபெற்ற பயணிகளின் மொபைல் எண்ணையும் சேகரித்தனர். அப்போது, இரு கொள்ளைச் சம்பவங்களின்போதும் சிலருடைய செல்போன் எண்களும், அவர்களது மொபைல் சிக்னல்களும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது முகமது ஜாசிம் என்ற சுக்கு என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் 21-ந் தேதி தனிப்படை போலீசார் நாக்பூர், மொனின்புரா பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் முகமது ஜாசிமை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முகமது குட்டு, முகமது இம்தியாஸ் ஆகியோர் அப்போது தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட முகமது ஜாசிமை போலீசார் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்கிருந்து சென்னை அழைத்து வந்தனர். சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் முகமது ஜாசிமை சிறையில் அடைத்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை  போலீசார் பிடித்ததற்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், தப்பியோடிய முகமது குட்டு, முகமது இம்தியாஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget