மேலும் அறிய

சிறுமியை 'டிஜிட்டல்' பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்.. ஆயுள் தண்டனை விதிப்பு! விவரம்!!

புதுடெல்லி: 3 வயது சிறுமியை டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவருக்கு போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 375ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: 3 வயது சிறுமியை டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவருக்கு போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 375ன் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செக்டார் 39 நொய்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சலர்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளியான 75 வயதான அக்பர் அலி, மேற்கு வங்க கிராமத்தைச் சேர்ந்தவர். நொய்டா செக்டார் 45ல் உள்ள சலர்பூரில் வசிக்கும் தனது திருமணமான மகளைப் பார்க்க வந்துள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் அண்டை வீட்டாரின் மகள் என்று கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோரின் அறிக்கையின் அடிப்படையில் அக்பர் அலிக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்படி, அக்பர் அலி சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி யாரும் இல்லாதபோது தனது மகள் வீட்டிற்கு அழைத்துச் சென்று டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அக்பர் அலி செய்த இந்த மோசமான செயலால் பயந்தப்போன சிறுமி அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்து அக்பர் அலிக்கு எதிராக எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளன்ர். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அந்த சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த குற்ற செயல் காரணமாக அன்று கைது செய்யப்பட்ட அகபர் அலி இன்று வரை மாவட்ட சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனில் குமார் சிங், சூழ்நிலை சான்றுகள், மருத்துவ அறிக்கை மற்றும் பிற எட்டு சாட்சியங்களின் அடிப்படையில் அக்பர் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அலிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. 

முன்னதாக, நொய்டா ஃபேஸ்-3 காவல் நிலையப் பகுதியில் ஏழு மாத பெண் குழந்தையை டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மனோஜ் லாலா என்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டார். அதேபோல், கடந்த ஜூன் 2022 ம் தேதி நொய்டா எக்ஸ்டென்ஷனின் தனது ஐந்து வயது குழந்தையை டிஜிட்டல் முறையில் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டார். 

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன?

'டிஜிட்டல் கற்பழிப்பு' என்பது டிஜிட்டல் சார்ந்த பாலியல் குற்றம் அல்ல. ஒரு பெண் அல்லது சிறுமியிடம் விருப்பமின்றி கை விரல்கள் அல்லது கால்விரல்களைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக பெண்ணின் பிறப்புறுப்பில் ஊடுருவும் செயலாகும். 

ஆங்கில அகராதியில் 'டிஜிட்' என்ற வார்த்தைக்கு விரல், கட்டைவிரல் மற்றும் கால்விரல் என்று அர்த்தம், அதனால்தான் இந்த செயலுக்கு 'டிஜிட்டல் ரேப்' என்று பெயர்.

டிசம்பர் 2012 வரை, 'டிஜிட்டல் ரெப்' பாலியல் வன்கொடுமையாக கருதப்பட்டது. நிர்பயா கும்பல் பலாத்கார சம்பவத்திற்குப் பிறகுதான், நாடாளுமன்றத்தில் புதிய கற்பழிப்புச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டனது. இந்தச் சட்டம் பிரிவு 375 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமாக வகைப்படுத்தப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.