மேலும் அறிய

Crime: இரிடியத்தால் வரும் கோடி... லட்சத்தை இழந்து கூலித் தொழிலாளியான நகை வியாபாரி...!

நாகராஜனிடம் நீங்கள் ஐந்து  லட்சம் ரூபாய் வழங்கினால் மிக விரைவில் 5 கோடியாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார் நாக தேவதை சித்தர் பீடம் & அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மணலி விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். நகை வியாபாரியாக இருந்து வந்த நாகராஜனுக்கு திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதா புரத்தில் உள்ள  நாக தேவதை சித்தர் பீடம் மற்றும் அறக்கட்டளை வைத்து நடத்திவரும் பா. இசக்கிமுத்து என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நகை வியாபாரி நாகராஜனிடம் அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து என்பவர் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏபி ராஜ் என்பவருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் உள்ளதாகவும், அவரிடம் இரிடியம் என்னும் விலை மதிக்க முடியாத பொருள் உள்ளதாகவும் அந்த பொருளை விற்று அதில் வரும் 2000 கோடி ரூபாய் பணத்தை தனது அறக்கட்டளையில் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அறக்கட்டளைக்கு வரும் பணத்தை பலருக்கு குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்பட இருப்பதாகவும் பல ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை உண்மை என நாகராஜன் நம்பி உள்ளார்.  அவ்வாறு குறைந்த வட்டிக்கு பணம்  வழங்கப்பட வேண்டுமானால் நாக தேவதை சித்தர் பீட அறக்கட்டளையில்  உறுப்பினராக சேர்ந்து பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி உள்ளார். அதோடு மட்டுமின்றி நாகராஜனிடம் நீங்கள் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினால் மிக விரைவில் 5 கோடியாக திருப்பி வழங்கப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய நகை வியாபாரி நாகராஜன்  தன்னால் முடிந்த அளவில் வீடு மற்றும் நகைகளை விற்று 30 லட்சம் வரை இசக்கிமுத்து & பாஸ்டர் ஏ பி ராஜ் என்பவரின் வங்கி கணக்கிலும் செலுத்தியுள்ளார்.


Crime: இரிடியத்தால் வரும் கோடி... லட்சத்தை இழந்து கூலித் தொழிலாளியான நகை வியாபாரி...!

பணத்தை இழந்த நாகராஜன்

இந்நிலையில் குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு நகை வியாபாரி நாகராஜன் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பணம் கேட்டுள்ளார்.  அப்போது அவரிடம் மேலும் கூடுதலாக பணம் வருகிற மாதிரி இருக்கிறது. அதனால் அவசரப்படாமல் சற்று காலதாமதம் செய்து வைத்துள்ளேன் என இசக்கிமுத்து கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் நகை வியாபாரி நாகராஜன் பணம் கேட்கும் பொழுதும் இதே பதிலையே அறக்கட்டளை நிர்வாகி இசக்கி முத்து கூறிவந்துள்ளார். இதனால் நாகராஜனுக்கு கடனுக்கு மேல் கடன் அதிகமாகி ஊருக்குள் தலை காட்ட முடியாமல் தனது மனைவியின் நகைகள் மற்றும் தனது வீட்டினையும் விற்றுவிட்டு ஊரை காலி செய்து காரியாண்டி அருகில் உள்ள திருமலாபுரத்திற்கு சென்றுவிட்டார்.  நகை வியாபாரம் செய்து வந்த நிலையில் பணம் அனைத்தையும் இழந்து தற்போது கான்கிரீட் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு நாகராஜ் தள்ளப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், தான் பணத்தை இழந்த விபரம் குறித்து வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளனர். பின்பு ஹலோ போலீசில் நாகராஜன் புகார் அனுப்பியுள்ளார். பின்பு ஹலோ போலீசிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக தொடர்பு கொண்டு புகார் செய்யுமாறு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.


Crime: இரிடியத்தால் வரும் கோடி... லட்சத்தை இழந்து கூலித் தொழிலாளியான நகை வியாபாரி...!

இதனால் நாகராஜன் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தான் ஏமாற்றப்பட்டதை புகாராக அளித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏ.பி ராஜன் மற்றும், நாக தேவதை சித்தர் அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து ஆகியோரிடம் நாகராஜன் தொலைபேசியில் பேசிய ஆடியோ, மற்றும் வீடியோ பதிவுகளையும் புகாரில் சமர்ப்பித்துள்ளார். மேலும் தனது புகார் குறித்து தமிழக அரசும், காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுத்து தான் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும், தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனவும், தன்னை ஏமாற்றிய கும்பல்களின், தொலைபேசி எண்களையும், வங்கி கணக்குகளையும் முறையாக ஆய்வு செய்து விசாரித்தால் தன்னைப் போல் ஏமாந்த பல பேர்களின் உண்மை நிலை  வெளிச்சத்துக்கு வரும் எனவும் புகார் அளித்துள்ளார். பணத்தாசை கண்ணை மறைத்த நிலையில் தன்னிடம் இருந்த நகை, பணம், வேலை என அனைத்தையும் இழந்து தற்போது கண் விழித்து கதறும் நிலைக்கு நாகராஜன் தள்ளப்பட்டு இருப்பது மேலும் இதனை நம்பி பணத்தை இழந்தவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கோடிக்கு ஆசைப்பட்டு லட்சத்தை இழந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
மதுரையில் அத்துமீறி கஞ்சா விற்பனை.. சிசிடிவிக்களை உடைத்து காவல்துறைக்கு சவாலை ஏற்படுத்தும் இளைஞர்கள் !
மதுரையில் அத்துமீறி கஞ்சா விற்பனை.. சிசிடிவிக்களை உடைத்து காவல்துறைக்கு சவாலை ஏற்படுத்தும் இளைஞர்கள் !
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!
தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
CV Shanmugam: இபிஎஸ்-யிடம் தஞ்சமா? MLA பதவி ராஜினாமாவா? சிவி சண்முகம் இன்று முக்கிய முடிவு!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: அடுத்த இரு நாட்களுக்கான வானிலை நிலவரம்!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
MK Stalin:
MK Stalin: "நீங்க சொல்றதை வச்சுதான் நான் முடிவு எடுக்கனும்.." மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
பிரதமரை சந்திக்க போன இடத்தில் ஏஜண்ட்க்கு என்ன வேலை..? தவெகவினர் கேள்வி
Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! ஜஸ்டில் மிஸ்ஸான வரலாறு! சன்ரைசர்ஸை பிழிஞ்செடுத்த சூர்யவன்ஷி!
Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! ஜஸ்டில் மிஸ்ஸான வரலாறு! சன்ரைசர்ஸை பிழிஞ்செடுத்த சூர்யவன்ஷி!
Embed widget