மேலும் அறிய

Crime: ஏடிஎம்களை பயன்படுத்தி நெல்லையில் நூதன கொள்ளை; ஹரியானாவை சேர்ந்த இருவர் கைது

4 மணி நேர தேடலுக்கு பின் ஒருவர் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியிலும் மற்றொருவர் சதக்கத்துல்லா கல்லூரி அருகேயும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர். 

நெல்லை மாநகர் பகுதியில் உள்ளது  சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்த அரசு உடமை வங்கியில் உள்ள ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருடப்படுவதாக வங்கியின் சார்பில் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படி அச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் முப்பட் மற்றும் சலீம் ஆகிய இரண்டு இளைஞர்கள் தான் என தெரிய வந்த  நிலையில், அவர்களை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இச்சூழலில் அரசுடமையாக்கப்பட்ட மற்றொரு வங்கியான எஸ்பிஐ  வங்கி ஏடிஎம்மில் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் இருவரும் ஈடுபட முயற்சித்துள்ளனர். அப்போது இருவரையும் கையும், களவுமாக மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 

நூதன கொள்ளை:

தொடரந்து சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் நகர் பகுதியில் உள்ள பல்வேறு எஸ்பிஐ மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம்களில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து எவ்வாறு நூதனை முறையில் கொள்ளையடித்தனர் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் எஸ்பிஐ மற்றும் சிபிஐ வங்கிகளில் கணக்கு உள்ளது. இவர்கள் இந்த வங்கி கணக்கில் உள்ள தங்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ச்சி தகவல்

பணம் எடுப்பது போன்று ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் வழங்கும் இயந்திரத்தில் தங்களது ஏடிஎம் கார்டுகளை போட்டு பணம் எண்ணிக் கொண்டிருக்கும் போது ஏடிஎம் மிஷினை ஆப் செய்து விடுகின்றனர். பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அதனை ஆன் செய்கின்றனர். அப்போது ஏற்கனவே எண்ணிய பணத்தை இயந்திரம் வெளியே தள்ளி விடுகிறது.. ஆனால் அவர்களது கணக்கில் பணம் குறைவது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் தொடர்ந்து இது போன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பியோட்டம்... கைது..

இதனை அடுத்து கைது செய்யபட்ட இருவரையும் இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவரும் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து காவல்துறையினர்  அவர்களை தீவிரமாக தேடும் பணி ஈடுபட்டு வந்தனர்.  4 மணி நேர தேடலுக்கு பின் ஒருவர் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியிலும் மற்றொருவர் சதக்கத்துல்லா கல்லூரி அருகேயும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர்.  பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணம் குறையாமல் பணத்தை நூதன முறையில் திருடி வந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget