மேலும் அறிய

Crime: ஏடிஎம்களை பயன்படுத்தி நெல்லையில் நூதன கொள்ளை; ஹரியானாவை சேர்ந்த இருவர் கைது

4 மணி நேர தேடலுக்கு பின் ஒருவர் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியிலும் மற்றொருவர் சதக்கத்துல்லா கல்லூரி அருகேயும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர். 

நெல்லை மாநகர் பகுதியில் உள்ளது  சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்த அரசு உடமை வங்கியில் உள்ள ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருடப்படுவதாக வங்கியின் சார்பில் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படி அச்சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் முப்பட் மற்றும் சலீம் ஆகிய இரண்டு இளைஞர்கள் தான் என தெரிய வந்த  நிலையில், அவர்களை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இச்சூழலில் அரசுடமையாக்கப்பட்ட மற்றொரு வங்கியான எஸ்பிஐ  வங்கி ஏடிஎம்மில் இதுபோன்று திருட்டு சம்பவத்தில் இருவரும் ஈடுபட முயற்சித்துள்ளனர். அப்போது இருவரையும் கையும், களவுமாக மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். 

நூதன கொள்ளை:

தொடரந்து சந்திப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் நகர் பகுதியில் உள்ள பல்வேறு எஸ்பிஐ மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளின் ஏடிஎம்களில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து எவ்வாறு நூதனை முறையில் கொள்ளையடித்தனர் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் எஸ்பிஐ மற்றும் சிபிஐ வங்கிகளில் கணக்கு உள்ளது. இவர்கள் இந்த வங்கி கணக்கில் உள்ள தங்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ச்சி தகவல்

பணம் எடுப்பது போன்று ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் வழங்கும் இயந்திரத்தில் தங்களது ஏடிஎம் கார்டுகளை போட்டு பணம் எண்ணிக் கொண்டிருக்கும் போது ஏடிஎம் மிஷினை ஆப் செய்து விடுகின்றனர். பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அதனை ஆன் செய்கின்றனர். அப்போது ஏற்கனவே எண்ணிய பணத்தை இயந்திரம் வெளியே தள்ளி விடுகிறது.. ஆனால் அவர்களது கணக்கில் பணம் குறைவது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் தொடர்ந்து இது போன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பியோட்டம்... கைது..

இதனை அடுத்து கைது செய்யபட்ட இருவரையும் இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவரும் காவல்துறையின் பிடியில் இருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து காவல்துறையினர்  அவர்களை தீவிரமாக தேடும் பணி ஈடுபட்டு வந்தனர்.  4 மணி நேர தேடலுக்கு பின் ஒருவர் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியிலும் மற்றொருவர் சதக்கத்துல்லா கல்லூரி அருகேயும் காவல்துறையினரிடம் பிடிபட்டனர்.  பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தங்களது ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணம் குறையாமல் பணத்தை நூதன முறையில் திருடி வந்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
Embed widget