மேலும் அறிய

Crime: காதலியின் மகளை மிரட்டி ஒரு ஆண்டுக்கு மேலாக வன்கொடுமை.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்த வாழ்க்கை துணையின் மகளை 37 வயது நபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்த வாழ்க்கை துணையின் மகளை 37 வயது நபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்தான் இந்த வெட்கக்கேடான சம்பவம் அரங்கேறியுள்ளது. நாக்பூரில் உள்ள வகோடா பகுதியை சேர்ந்த 37 வயதான நபர், கணவரை விட்டு பிரிந்து வாழும் 32 வயது பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒன்றாக வாழ முடிவு எடுத்து தனியே வீடு மூவரும் தங்கியுள்ளனர். 

இந்தநிலையில், அந்த பெண்ணின் தாயார் வேலைக்கு செல்லும்போதெல்லாம், அப்பெண்ணின் 12 வயது மகளை பாலியல் ரீதியா துன்புறுத்த தொடங்கியுள்ளார். தொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. 

மிரட்டல்:

அந்த நபர் சிறுமியிடம் இதுகுறித்து உன் தாயிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால் உன்னையும், உன் தாயையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தனது காரியத்தை சாதித்துள்ளார். ஒரு வருடமாக அமைதி காத்த அந்த சிறுமி, ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாய், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த நபரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

நாக்பூரில் உள்ள ஹட்கேஷ்வர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குற்றம் சாட்டப்பட்டவர் தனது 32 வயது லைவ்-இன் பார்ட்னர் மற்றும் அவரது மகளுடன் அக்டோபர் 2022 முதல் தனது முதல் திருமணத்திலிருந்து வசித்து வந்தார். சிறுமியின் தாய் வேலைக்காக வெளியில் செல்லும் போதெல்லாம் அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்" என தெரிவித்தார். 

தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஒரு வருடமாக குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வந்ததாகவும், இதன் காரணமாக அவர் இதைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. ஆனால், கடைசியில் தைரியம் வரவழைத்த சிறுமி, சமீபத்தில் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் வன்கொடுமை கிரிமினல் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை நடந்து வருகிறது.

போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

  1. 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
  2. இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  3. 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget