மேலும் அறிய

Nagapattinam: ‘நான் தப்பே செய்யல’...போலீசுக்கு டஃப் கொடுத்த திருடன் - நாகையில் பரபரப்பு

நான் ஒண்ணுமே பண்ணல யாராவது வீடியோ எடுங்க தரையில் படுத்து கொண்டு பப்ளிக் இடம் உதவி கேட்ட பலே திருடன்: இருசக்கர வாகனத்தை திருடிய 24 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த போலீசார்.

பைக் திருடி சிசிடிவியால் மாட்டிய திருடன் போலீசிடம் சிக்கிக்கொண்ட போது,  ‘நான் தப்பே செய்யல’ என ஆட்டோவில் ஏற மறுத்து போலீசுக்கு டஃப் கொடுத்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
நாகை மாவட்டம் நாகூர் தாமு தம்பி மரைக்காயர் தெரு சேர்ந்தவர் முகம்மது இக்சான்னுள்ளா. இவர் நேற்று வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி பூட்டி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த பொழுது தனது இருசக்கர வாகனம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் தள்ளி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து முகமது இஸ்ஸான்நுல்லா கண்காணிப்பு சிசிடிவி காட்சிகளுடன் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்ற சரித்திர பின்னணி கொண்ட  நாகை வ.உ.சி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. இவர் மீது தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

Nagapattinam: ‘நான் தப்பே செய்யல’...போலீசுக்கு டஃப் கொடுத்த திருடன் - நாகையில் பரபரப்பு
 
இதனை அடுத்து  இன்று அவரது வீட்டின் அருகில் பதுங்கி இருந்தவரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றினார். பிடிபட்ட கார்த்திகேயனை தங்களது இருசக்கர வாகனத்தில் போலீசார் நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது வெளிப்பாளையம் காவல் நிலையம் எதிரே வந்த பொழுது திடீரென மயக்கம் வருவதாக கூறி கீழே சரிந்துள்ளார். உண்மையாக மயங்கி விட்டார் என நினைத்த போலீசார் மனிதாபிமானத்தோடு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். வாகனத்திலிருந்து இறங்கிய டூவீலர் திருடன் கார்த்திகேயன் தான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என மீண்டும் வாகனத்தில் ஏற மறுத்து தரையில் படுத்து போலீசாருக்கு டஃப் கொடுக்க ஆரம்பித்தார். அவரை போலீசார் ஆட்டோவில் ஏற்ற முடியாமல் திணறினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் உடன் மல்லு கட்டிய கார்த்திகேயனை பொதுமக்கள் உதவியுடன் ஆட்டோவில் தூக்கி போட்டு அழைத்துச் சென்றனர்.

Nagapattinam: ‘நான் தப்பே செய்யல’...போலீசுக்கு டஃப் கொடுத்த திருடன் - நாகையில் பரபரப்பு
 
வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே நடந்த இச்ச சம்பவத்தை நூற்றுக்கணக்கானோர் அங்கு நின்று வேடிக்கை பார்த்த நிலையில் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் சக போலீசாருக்கு உதவி செய்ய வரவில்லை ஆட்டோவில் திருடனை ஏற்றிய பிறகு அங்கு வந்த வெளிப்பாளையம் போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றது காண்போரை கவலை அடையச் செய்தது. அதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். டூவீலர் திருடன் போலீசாரிடம் மல்லுக்கட்டிய சம்பவமும் காவல் நிலையம் அருகே நடந்த போதும் வெளிப்பாளையம் காவல்துறையினர் சக காவல்துறையினர் உதவிக்கு வராததும் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget