மேலும் அறிய

Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

”படிக்க வைக்க பெற்றோர் சிரமப்படுவதை எண்ணி மன வேதனையில் இருந்த மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது”

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமாருக்கு (53) 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.  இந்த நிலையில் இவரது மகள் பாப்பா (18) பிளஸ் 2 முடித்து விட்டு பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை பாப்பாவின் தந்தை  முத்துக்குமார் மிகவும் சிரமப்பட்டு  இரண்டு தவணைகளாக செலுத்தி உள்ளார். கூலி தொழில் செய்வதால் அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை கவனிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் அவர் சம்பாதித்த தொகையை மகளின் படிப்பிற்காக செலவழித்து விட்டு குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.  இதற்கிடையில் தனது படிப்பிற்கு இருந்த பணத்தை செலவழித்து விட்டு பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு வருவதை எண்ணி மாணவி பாப்பா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.


Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பாப்பா கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காத  நிலையில் கதவை சிரமப்பட்டு திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதனர்.


Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

மாணவியை கீழே இறக்கி பார்த்தப்போது அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்துள்ளது. இது பற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் பாப்பாவின் உடமைகளை சோதனையிட்டு பார்த்த போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையிடம் சிக்கியது. 


Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

அதில், எனக்காக மற்றவர்கள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை, எனக்கு காலேஜ் fees கட்ட அம்மா அப்பா சிரமப்படுறாங்க. இப்போ கூட fees கட்ட தான் போய்ருக்காங்க. மத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாதுனு தான் இந்த முடிவு. என் சாவுல மர்மம் இருக்க கூடாதுனு தான் இந்த லெட்டர். வேறு எதுவும் காரணம் இல்லை என அவர் உருக்கமாக எழுதியிருந்தார். அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் இந்த தற்கொலை முடிவை எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget