மேலும் அறிய

Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

”படிக்க வைக்க பெற்றோர் சிரமப்படுவதை எண்ணி மன வேதனையில் இருந்த மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது”

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான முத்துக்குமாருக்கு (53) 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.  இந்த நிலையில் இவரது மகள் பாப்பா (18) பிளஸ் 2 முடித்து விட்டு பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை பாப்பாவின் தந்தை  முத்துக்குமார் மிகவும் சிரமப்பட்டு  இரண்டு தவணைகளாக செலுத்தி உள்ளார். கூலி தொழில் செய்வதால் அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை கவனிப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் அவர் சம்பாதித்த தொகையை மகளின் படிப்பிற்காக செலவழித்து விட்டு குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.  இதற்கிடையில் தனது படிப்பிற்கு இருந்த பணத்தை செலவழித்து விட்டு பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு வருவதை எண்ணி மாணவி பாப்பா மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.


Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

இந்த நிலையில் நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பாப்பா கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவை தட்டிப்பார்த்தும் திறக்காத  நிலையில் கதவை சிரமப்பட்டு திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதனர்.


Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

மாணவியை கீழே இறக்கி பார்த்தப்போது அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்துள்ளது. இது பற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் பாப்பாவின் உடமைகளை சோதனையிட்டு பார்த்த போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையிடம் சிக்கியது. 


Suicide: கல்லூரி கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்: கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை

அதில், எனக்காக மற்றவர்கள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை, எனக்கு காலேஜ் fees கட்ட அம்மா அப்பா சிரமப்படுறாங்க. இப்போ கூட fees கட்ட தான் போய்ருக்காங்க. மத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாதுனு தான் இந்த முடிவு. என் சாவுல மர்மம் இருக்க கூடாதுனு தான் இந்த லெட்டர். வேறு எதுவும் காரணம் இல்லை என அவர் உருக்கமாக எழுதியிருந்தார். அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் இந்த தற்கொலை முடிவை எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் திடீரென கழன்று ஓடிய 2 சக்கரங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்... சீர்காழியில் திக்..திக்..
அரசு பேருந்தில் திடீரென கழன்று ஓடிய 2 சக்கரங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்... சீர்காழியில் திக்..திக்..
Crime News: சாவிக்கொத்து தந்த துப்பு! காதலியை கொன்ற கொடூரன் கைது, அதிர்ச்சி தரும் காரணம்
Crime News: சாவிக்கொத்து தந்த துப்பு! காதலியை கொன்ற கொடூரன் கைது, அதிர்ச்சி தரும் காரணம்
சென்னை ; உதவி ஆய்வாளராக தொடங்கி , 4 கோடி சொத்து குவித்த பெண் ஆய்வாளர் !! அதிரடி விசாரணை
சென்னை ; உதவி ஆய்வாளராக தொடங்கி , 4 கோடி சொத்து குவித்த பெண் ஆய்வாளர் !! அதிரடி விசாரணை
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
விவசாயிகள் பணத்தில் முறைகேடா? 4 ஆண்டுகளுக்குப் பின் கூடிய கூட்டத்தில் வெடித்த மோதல் - ரூ.77 லட்சம் எங்கே? விவசாயிகள் கொந்தளிப்பு...
ABP Premium

வீடியோ

DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்
DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: மக்களே! திமுக ஆட்சியில் சட்டசபை செயல்பாடுகள் எப்படி? முழு டேட்டா உள்ளே!
TN Assembly: மக்களே! திமுக ஆட்சியில் சட்டசபை செயல்பாடுகள் எப்படி? முழு டேட்டா உள்ளே!
Scholarship: இந்த மாணவர்களுக்கு எல்லாம் 100% கட்டணம் தள்ளுபடி! பிட்ஸ் பிலானி அதிரடி அறிவிப்பு!
Scholarship: இந்த மாணவர்களுக்கு எல்லாம் 100% கட்டணம் தள்ளுபடி! பிட்ஸ் பிலானி அதிரடி அறிவிப்பு!
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; +2 முடித்த மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் வேலை- விவரம்!
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; +2 முடித்த மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரத்தில் வேலை- விவரம்!
உள்ளேவா? வெளியேவா? காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கும் கூட்டணி கட்சிகள் - பலே ப்ளானா இருக்கே!
உள்ளேவா? வெளியேவா? காங்கிரஸ் முடிவுக்காக காத்திருக்கும் கூட்டணி கட்சிகள் - பலே ப்ளானா இருக்கே!
வெறும் 18 பேர்தான்! சட்டசபைக்கு லீவு போடாமல் போன எம்.எல்.ஏ.க்கள் - யார்? யார்?
வெறும் 18 பேர்தான்! சட்டசபைக்கு லீவு போடாமல் போன எம்.எல்.ஏ.க்கள் - யார்? யார்?
TN WEATHER ALERT: தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! இடியுடன் கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
தென் மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்.! இடியுடன் கன மழை- எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
IIT Madras: ஐஐடி சென்னையில் டேட்டா சைன்ஸ் படிப்பு அறிமுகம்; வேலைவாய்ப்பு பிரகாசம்- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி சென்னையில் டேட்டா சைன்ஸ் படிப்பு அறிமுகம்; வேலைவாய்ப்பு பிரகாசம்- விண்ணப்பிப்பது எப்படி?
UGC: எச்சரிக்கை; இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்; எங்கு முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? யுஜிசி அதிர்ச்சி தகவல்!
UGC: எச்சரிக்கை; இந்தியாவில் 32 போலி பல்கலைக்கழகங்கள்; எங்கு முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? யுஜிசி அதிர்ச்சி தகவல்!
Embed widget