![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime | வீடியோ காலில் அந்தரங்க உறுப்பை காட்டி வன்தொல்லை.. அதிரடியாக முடிவெடுத்த பெண்..
அந்த நபரின் போன் கால்கள் மற்றும் மெஸேஜ்களை ஸ்கிரீன் ஷாட்களை எடுத்தார். பின்னர் அவர் காவல்துறையை அணுகி அடையாளம் தெரியாத நபர் மீது புகார் கூறியுள்ளார்.
![Crime | வீடியோ காலில் அந்தரங்க உறுப்பை காட்டி வன்தொல்லை.. அதிரடியாக முடிவெடுத்த பெண்.. Mumbai crime news woman receives obscene video call from unknown caller files complaint Crime | வீடியோ காலில் அந்தரங்க உறுப்பை காட்டி வன்தொல்லை.. அதிரடியாக முடிவெடுத்த பெண்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/16c678619d8150ecbfd37a57dc52636e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெரியாத நபர் ஒருவர் ஒரு பெண்ணின் செல்போனுக்கு தனது அந்தரங்க வீடியோ அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. வாட்ஸ்அப் வீடியோ காலில் தோன்றிய அந்த நபர், தனது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார். பின்னர் அவருக்கு ஆபாச வீடியோவையும் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரில் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பயந்தர் மேற்கு பகுதியில் 37 வயதான பெண் ஒருவர், தனது கணவர், மகள் (18), மகன் (15) மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். அவரது வாட்ஸ்அப்பில் பல தவறான மெஸேஜ்கள் மற்றும் அழைப்புகள் வந்துள்ளன.
அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஆன்லைன் படிப்புக்கு செல்போன் பயன்படுத்திய தனது மகளுக்கு வாட்ஸ்அப்பில் “ஹாய்” வந்ததாகவும், அதற்கு “ஹலோ யார் இது” என்று பதிலளித்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் இணையதளம் மூலமாக விபச்சாரம்: புரோக்கர் கைது; 4 பெண்கள் மீட்பு
அப்போது, "ஐ மிஸ் யூ" என்ற மற்றொரு செய்தி அவருக்கு வந்தது. அவர் தனது தாயிடம் செய்தியைக் காட்டும்போது, அவர்களுக்கு வீடியோ கால் வந்தது. அதில் அந்த நபர் கேமரா முன் தனது அந்தரங்க உறுப்பை காட்டி, பின்னர் அவர்களுக்கு ஆபாச வீடியோவையும் அனுப்பியதாக பயந்தர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நபரின் போன் கால்கள் மற்றும் மெஸேஜ்களை ஸ்கிரீன் ஷாட்களை எடுத்தார். பின்னர் அவர் காவல்துறையை அணுகி அடையாளம் தெரியாத நபர் மீது புகார் கூறியுள்ளார்.
"நாங்கள் ஐபிசியின் பிரிவு 354-A (i) (iii) ஐடி சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 67 (a) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம்" என்று மற்றொரு அதிகாரி கூறினார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க : Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)