மேலும் அறிய

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?

சுங்க அதிகாரிகளும் இணைந்து, கடத்தல் பயணியை கைது செய்ததோடு, அந்தப் பயணியின் செலவில், கடத்தல் குரங்கு குட்டிகளை மீண்டும், தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திவரப்பட்ட அரிய வகை,2  மேற்கு ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வன குற்ற பிரிவினரும், சுங்க அதிகாரிகளும் இணைந்து, கடத்தல் பயணியை கைது செய்ததோடு, அந்தப் பயணியின் செலவில், கடத்தல் குரங்கு குட்டிகளை மீண்டும், தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
 
தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி  கொண்டு இருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 32 வயது ஆண் பயணி  ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு திரும்பி வந்தார். அவர் இரண்டு பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தார். சுங்க  அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளுக்கு திருப்திகரமாக இல்லை.
 
இதை அடுத்து அந்த பயணியை சுங்க அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர். அவருடைய உடமைகளை சோதித்த போது உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனால் அவர் வைத்திருந்த இரண்டு பிளாஸ்டிக் கூடைகளில், அறிய வகை குரங்கு குட்டிகள் கடத்திக் கொண்டு வந்தது தெரிய வந்தது.  மேற்கு ஆப்பிரிக்க வனப்பகுதியில், அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கக்கூடிய சூட்டி மங்காவே  மற்றும் காலர்டு மங்காவே என்ற 2  ஆப்பிரிக்கா வகை அரிய குரங்கு குட்டிகள், அவர் வைத்திருந்த கூடைகளுக்குள் இருந்தன. இதை அடுத்து சுங்க  அதிகாரிகள் அவரை வெளியில் விடாமல் சுங்க அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
 
அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆப்பிரிக்க வகை குரங்குகள் மிகவும் ஆபத்தானவை. இவைகள் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் நிறைந்த வகைகள். இந்த வகை குரங்குகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு, அனுமதியே கிடையாது. மேலும் இந்த பயணி முறையான எந்த அனுமதியும் இல்லாமல், இந்த 2 குரங்குகளையும் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 
 

Crime : மீண்டும் கடத்தப்பட்ட குரங்குக்குட்டிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
இதை அடுத்து இந்த குரங்குகளை கடத்தி வந்த அந்தப் பயணியை சுங்க அதிகாரிகளும், ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் இணைந்து கைது செய்தனர். அதோடு இந்த இரண்டு குரங்குகளையும், மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கும் முடிவு செய்துள்ளனர். அதற்கான செலவுகளை, இந்த குரங்குகளை சட்ட விரோதமாக கடத்தி வந்த கடத்தல் பயணியிடம், வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர்.இந்த அரிய வகை குரங்குகளை எதற்காக இவர் தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? இந்தக் குரங்குகளை யார் கடத்தி வர சொன்னார்கள்? என்று தொடர்ந்து சுங்க மற்றும் ஒன்றிய வன குற்றப்பிரிவு அதிகாரிகள் கடத்தல் அசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!
விழுப்புரத்தில் பயங்கரம்! சொகுசு பஸ் - கார் - பைக் அடுத்தடுத்து மோதி ரத்தக் களறியான நெடுஞ்சாலை: 2 பேர் துடிதுடித்து பலி!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Embed widget