மேலும் அறிய

Crime: சாப்பாடு மூலம் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி...! சதித்திட்டம் அம்பலமானது எப்படி...?

ஆந்திரப்பிரதேசத்தில் சமைத்த உணவால் கணவனை கொலை செய்ததாக பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப்பிரதேசத்தில் தான் சமைத்த உணவால் கணவனை கொலை செய்ததாக பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாயமான கணவர்:

பொதுவாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்கள் அதனை செய்வதற்கு விதவிதமான வழிகளை யோசிப்பார்கள். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில்  உண்மை வெளிப்படும் போது காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு அந்த குற்றச் செயல்கள் இருக்கும். அப்படியான ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பீமிலி அருகே நடைபெற்றுள்ளது. 

அங்கு பைடி ராஜூ என்பவர் தனது மனைவி வான்கா ஜோதிவுடன் வசித்து வந்தார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், பைடி ராஜூ டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே டிசம்பர் 29 ஆம் தேதி தனது கணவர் மாயமானதாக வான்கா ஜோதி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி காவல்துறையில் புகாரளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

திருமணத்தை மீறிய உறவு:

இதற்கிடையில் வான்கா ஜோதி மீது பைடி ராஜூ குடும்பத்தினரில் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் போலீசாரிடம் இதைப்பற்றி சொல்ல, ரகசியமாக ஜோதி கண்காணிக்கப்பட்டு வந்தார். அவரின் செல்போனை சோதனை செய்ததில்  பைடி ராஜூ காணாமல் போன வழக்கை பதிவு செய்த பின்னர் கே. சீனிவாச ராவ் என்ற ஒருவருக்கு அவர் பலமுறை அழைப்பு விடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து ஜோதி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வெளியான தகவலின்படி, ஜோதி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. 

மனைவியின் சதி:

இந்த விவகாரம் பைடி ராஜூவுக்கு தெரிய வந்ததும் அவர் சீனிவாச ராவ் உடன் இருக்கும் தொடர்பை கைவிடுமாறும் எச்சரித்துள்ளார். ஆனால் ஜோதி கைவிடாமல் இருந்துள்ள நிலையில், தங்களது உறவுக்கு எதிராக இருந்த ராஜூவையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர். திட்டப்படி ஜோதி தனது கணவருக்கு விதவிதமாக சமைத்து கொடுத்து வந்த நிலையில், டிசம்பர் 29 ஆம் தேதி வழங்கப்பட்ட உணவில் மயக்க மருந்தை கலந்துள்ளார். இதில் மயங்கிய  ராஜூவை அவர் ஸ்ரீனிவாச ராவ்  உடன் இணைந்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். 

பின்னர் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது உறவினர் பூலோகா ஆகியோர் ராஜூ உடலை ஸ்கூட்டரில் ஏற்றி 20 கி.மீ., தூரம் பயணித்து விசாகப்பட்டினத்துக்கு கொண்டு வந்துள்ளனர். டிசம்பர் 29 ஆம் தேதி இரவு விசாலாக்ஷி நகரில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர். மறுநாள் சீனிவாச ராவ் ஆம்புலன்ஸை அழைத்து, பைடிராஜு மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஊழியர்களிடம் தெரிவித்து அவர்களது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி தகன மைதானத்திற்கு கொண்டு சென்று எரித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

 

தலைப்பு செய்திகள்

மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
Embed widget