மேலும் அறிய

கடந்த ஆண்டு 50... இந்த ஆண்டு 17! மயிலாடுதுறையில் தொடரும் குண்டாஸ்..அலறும் சமூக விரோதிகள்!

மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய ரௌடி அஜித்குமார் குண்டர் சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் பொதுமக்களைப் பட்டாக்கத்தியால் மிரட்டி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) அஜித்குமார் என்பவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா பிரியா, பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பட்டாக்கத்தியுடன் பொதுமக்களுக்கு மிரட்டல்

மயிலாடுதுறை காவல் சரகத்திற்குட்பட்ட திருவிழந்தூர், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 27). இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இவர் மீது ‘போக்கிரி சரித்திரப் பதிவேடு’ (Rowdy History Sheet) துவக்கப்பட்டு, காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் 25-ஆம் தேதி (25.05.2026) அன்று, மயிலாடுதுறை காவிரி நகர் மேம்பாலம் அருகில் அஜித்குமார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டார். கையில் நீண்ட பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களை நோக்கியும், அங்கிருந்தவர்களை நோக்கியும் கொலை மிரட்டல் விடுத்துக் கூச்சலிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பொதுமக்களிடையே அச்சமும் ஏற்பட்டது.

உதவி ஆய்வாளர் புகார் - ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை

இச்சம்பவம் நடந்த சமயத்தில், அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector), அஜித்குமாரின் இந்தச் சட்டவிரோதச் செயலைக் கண்டு உடனடியாகத் தடுத்து நிறுத்த முயன்றார். மேலும், இது குறித்து அவரே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் ஒன்றை அளித்தார்.

உதவி ஆய்வாளரின் புகாரின் அடிப்படையில், எதிரி அஜித்குமார் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் உடனடியாகக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் (Inspector) சிவசெந்தில்குமார் இந்த வழக்கின் புலன் விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், பொதுமக்களை அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அஜித்குமார் (27) கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு (Judicial Custody) உட்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டப் பாய்வு மற்றும் சிறையிலடைப்பு

மேலும் அஜித்குமார் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலேயே செயல்பட்டு வருவதை காவல்துறையினர் கவனித்தனர். அவரது தொடர் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த சாதாரண சட்டப் பிரிவுகள் போதாது என்பதால், அவரைத் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, அஜித்குமார் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா பிரியா, மாவட்ட ஆட்சியருக்குத் தகுந்த ஆதாரங்களுடன் பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை விரிவாகப் பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், அஜித்குமாரைத் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் காவல் ஆளினர்கள் (Police Personnel) அடங்கிய குழுவினர், குற்றவாளி அஜித்குமாரைக் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அங்கு அடைத்தனர்.

நடப்பாண்டில் 17 பேர் மீது குண்டர் சட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகக் காவல்துறையினர் எடுத்து வரும் தொடர் தீவிர நடவடிக்கைகள் குறித்தும் செய்திக் குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு 2026-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை பல்வேறு கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 17 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

* கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள்: 02 நபர்கள்

* பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தவர்கள்: 07 நபர்கள்

* மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 05 நபர்கள்

* கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குற்றவாளிகள்: 02 நபர்கள்

* பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள்: 01 நபர்

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 50 நபர்கள் மீது இதே போன்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கடுமையான எச்சரிக்கை

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா பிரியா விடுத்துள்ள எச்சரிக்கையில், மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் அனைத்தும் காவல்துறையினரால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,

"பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது எவ்விதத் தக்காட்சுமின்றி தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள்" என எஸ்பி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மயிலாடுதுறை காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், ரௌடிகளுக்குப் பெரும் சிம்மசொப்பனமாக அமைந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget