மேலும் அறிய

காவல்துறையினருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறையில் காவல்துறையினர் தன்மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடுவதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருகும் கஞ்சா புழக்கம் 

மயிலாடுதுறை மாவட்டம் கடந்த சில மாதங்களாக கஞ்சா பழக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பலரும் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளனர். மேலும் இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறையினர் முறையாக கட்டுப்படுத்த வில்லை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பரவலாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


காவல்துறையினருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - மயிலாடுதுறையில் பரபரப்பு

காவல்துறையினர் நடவடிக்கைகள்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்து தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அடுத்து அதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிக்கவும், அவர்களிடம் சோதனையும் செய்து வருகின்றனர்.

Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது


காவல்துறையினருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - மயிலாடுதுறையில் பரபரப்பு

இளைஞர் தற்கொலை முயற்சி 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் மகன் 23 வயதான தீபக். சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது மாப்படுகை ரயில்வே கேட் அருகே உள்ள தனது தந்தையின் மீன் கடையில் தனது தந்தைக்கு உதவியாக மீன் வெட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் வழக்கம்போல தனது தந்தையின் கடையில் மீன் வெட்டி கொடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரோந்து போலீஸ் ராமமூர்த்தி கடையில் கஞ்சா வைத்திருப்பதாக கூறி ஆய்வு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த தீபக் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  


காவல்துறையினருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - மயிலாடுதுறையில் பரபரப்பு

இளைஞரின் குற்றச்சாட்டு 

இதுகுறித்து தீபக் கூறுகையில், தனக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாகவும், தான் கஞ்சா விற்பனை செய்வது கிடையாது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மயிலாடுதுறை காவல்துறையினர் தன்மீது பொய் குற்றச்சாட்டு சுமர்த்தி அவர்களாக கஞ்சாவை எடுத்துவந்து நான் வைத்திருத்தாக கூறி வழக்கு போடுவதும், என்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் தனது தந்தையின் கடையில் வியாபாரம் பாதித்து வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதால் தான் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மயிலாடுதுறையில் காவல்துறையினர் பொய்வழக்கு போடுவதாக கூறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதை ஊசியை விற்று இலட்சக்கணக்கில் பணம் பார்த்த கும்பல்..! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!


காவல்துறையினருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - மயிலாடுதுறையில் பரபரப்பு

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Embed widget