மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 பேர் கைது - எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 400 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 400 பேரை கைது செய்து 5 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சில ஆண்டுகளாக மாதங்களாக கஞ்சா, சாராயம், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை தடுப்பது என்பது எட்டாக்கனியா இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இதனை தடுக்க தீவிரம் காட்டி வருகிறார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 பேர் கைது - எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் கஞ்சா மற்றும் குட்கா வேட்டை நடத்தப்பட்டது. இந்த இருதினங்களிள் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதே போன்று கடந்த இருதினங்களில் நடத்தப்பட்ட குட்கா வேட்டையில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ஏராளமான குட்கா பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 பேர் கைது - எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

கடந்த 10 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை 

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக மொத்தம் 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 139 குற்றவாளிகளை கைது செய்து காவல்துறையினர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து 28 கிலோ கிராம் கஞ்சா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 பேர் கைது - எஸ்.பி. அதிரடி நடவடிக்கை

இந்த ஆண்டு இதுநாள் வரை கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக மொத்தம் 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட 261 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து 830 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் மீது தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ்.பி. எச்சரிக்கை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா போதை பொருடகள் விற்பனை செய்த 200 -க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருட்களின் விற்பனை குறித்த புகார் அளிக்க 9626169492 என்ற செல்போன் எண்ணிலும், வாட்ஸ் அப் முலமாகவும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும், சட்ட விரோதமாக போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
Embed widget