மேலும் அறிய

வாய்க்காலில் மிதந்த கொத்தனார் உடல்...கொலையா..? விபத்தா..? என போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை அருகே கட்டிடத் தொழில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாய்க்காலில் உயிரிழந்த கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குளிச்சார் கிராம பாசன வாய்க்காலில் இளைஞர் ஒருவர் முகத்தில் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையைத் மேற்கொண்டுள்ளனர்.

30 வயதான இளைஞரின் உயிரிழப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் தாலுகாவிற்கு உட்பட்ட குளிச்சார், சேரன்தோப்புத் தெருவைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் 30 வயதான ராமச்சந்திரன். இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனாராகப் பணியாற்றி வந்தார். ராமச்சந்திரனுக்கும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த செல்வப்பிரியா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரனின் மனைவி செல்வப்பிரியா, ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் ராமச்சந்திரன் மட்டும் தனியாக இருந்து வந்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் 

இந்நிலையில் குளிச்சார் பகுதி மக்கள் பாசன வாய்க்கால் கரை வழியாகச் சென்றபோது, வாய்க்கால் தண்ணீரில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் செம்பனார்கோவில் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், பொதுமக்களின் உதவியுடன் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அப்போது உயிரிழந்தவர் சேரன்தோப்புத் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. 

முகத்தில் ரத்தக் காயங்கள் - சந்தேகத்தில் போலீசார்

மீட்கப்பட்ட ராமச்சந்திரனின் சடலத்தைப் பரிசோதித்தபோது, அவரது முகத்தில் ரத்தக் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அவர் வாய்க்காலில் தவறி விழுந்து அடிபட்டாரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் அவரைத் தாக்கி வாய்க்காலில் வீசிச் சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போலீசார் ராமச்சந்திரனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகம்

மனைவி ஊருக்குச் சென்றிருந்த நேரத்தில், வாலிபர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்களின் கதறல் அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

போலீஸ் நடவடிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள செம்பனார்கோவில் போலீசார் "மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிகிறது. ராமச்சந்திரனுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? அல்லது குடும்பப் தகராறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்," என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரனின் செல்போன் அழைப்புகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அமைதியான குளிச்சார் கிராமப்புறப் பகுதியில் நடந்த இந்த இளைஞரின் உயிரிழப்பு அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Embed widget