மேலும் அறிய

ஆசிரியர்கள் உட்கோஷ்டி மோதலால் நேர்ந்த கொடூரம்: 3 ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

பள்ளித் தலைமை ஆசிரியர் திட்டியதால் பிளஸ் டூ மாணவி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 22 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இந்திரகுமார் (43) என்பவர், குறிப்பிட்ட சில ஆசிரியர்களை மட்டும் தனது ஆதரவாளர்களாக முன்னிறுத்திச் செயல்பட்டு வந்ததாகவும், மற்ற ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் வழங்காமல் புறக்கணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக ஒரு அணியாகவும், எதிர்ப்பாக மற்றொரு அணியாகவும் என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்துள்ளனர். இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் மனக்கசப்புகள் காரணமாக ஆசிரியர்களுக்கு இடையே அவ்வப்போது விரும்பத்தகாத வாக்குவாதங்களும் மோதல் சம்பவங்களும் நடைபெற்று வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

போலியான பாலியல் புகாரும் தொடர்ந்த விசாரணையும்

ஆசிரியர்களிடையேயான இந்த மோதல் போக்கின் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் ரீதியான புகார் ஒன்று எழுப்பப்பட்டது. இச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவில், அந்த ஆசிரியர் மீதான பாலியல் புகார் முற்றிலும் பொய்யானது என்றும், உள்நோக்கத்தோடு சோடிக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இப் புகார் விவகாரம் தொடர்பாகத் துறை சார்ந்த மேலதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் தொடர்ந்து நேரடி விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

மாணவிக்கு மிரட்டல் மற்றும் தற்கொலை முயற்சி சம்பவம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பங்கேற்றுப் சாட்சியமளித்த மாணவிகளைத் தலைமை ஆசிரியர் இந்திரகுமார் கடுமையாகத் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், தலைமை ஆசிரியரின் கோபத்திற்கும் மிரட்டலுக்கும் ஆளான பிளஸ் டூ பயிலும் 16 வயது மாணவி ஒருவர், தலைமை ஆசிரியரின் செயலுக்குப் பயந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மாணவி பள்ளிக்குச் செல்லாததைக் கண்ட அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரைப் பள்ளிக்குச் செல்லுமாறு வலிறுத்தியுள்ளனர். தலைமை ஆசிரியரின் மிரண்டால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மற்றும் காவல் துறை விசாரணை

மயங்கிய நிலையில் கிடந்த மாணவியைக் கண்ட அருகில் இருந்தவர்கள் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டுச் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் கொடூர சம்பவம் குறித்துத் தகவலறிந்த பூம்புகார் காவல் துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கும் பள்ளிக்கும் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் வாக்குமூலம் மற்றும் சக மாணவிகளின் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர்.

தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. மாணவியை மிரட்டிய பொறுப்பு தலைமை ஆசிரியர் இந்திரகுமார் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட இரு ஆசிரியர்கள் என மொத்தம் மூன்று ஆசிரியர்களை உடனடியாகப் வேறு பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவி ஆசிரியருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்கள் உட்கோஷ்டி மோதலால் நேர்ந்த கொடூரம்: 3 ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
ஆசிரியர்கள் உட்கோஷ்டி மோதலால் நேர்ந்த கொடூரம்: 3 ஆசிரியர்களைப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி சைபர் மோசடி! 3 பேரிடம் ரூ.4.17 லட்சம் அபேஸ்
புதுச்சேரியில் அதிர்ச்சி சைபர் மோசடி! 3 பேரிடம் ரூ.4.17 லட்சம் அபேஸ்
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
"அதிமுகவிற்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா இதப் பண்ணட்டும்!" எம்பி சுதா..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK To TVK : தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
தவெகவிற்கு தாவ 5 அதிமுக MLA-க்கள் ரெடி.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்கும் விஜய்- நடப்பது என்ன.?
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
உதயநிதியை விடாமல் குறிவைக்கும் தவெக.! உடனே ஆக்‌ஷன் எடுக்க பறந்த அதிரடி உத்தரவு- ஷாக்கில் திமுக
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Leema Rose Martin: என் கணவர் தான் கிடைச்சாரா? .. சும்மா சும்மா இழுக்குறீங்க.. திமுக மீது லீமா ரோஸ் டென்ஷன்!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
Tenkasi: சைடிஷ் வாங்க லேட் ஆனதால் ஆத்திரம்.. இளைஞர் வெட்டிக்கொலை.. 3 சிறுவர்கள் கைது!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்.! அறிகுறிகள் என்ன.? பொது சுகாதாரத்துறை அலர்ட்
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
ரொம்ப கம்மி வட்டியில் மகளிருக்கு கடன்.! ரூ.500 கோடியை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
Gold and silver rate today : ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
ஓணம் பண்டிகையில் தங்கம் விலையில் ஜாக்பாட்டா.!! இன்று தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
Embed widget