மேலும் அறிய

"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!

சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் RTE திட்டத்தில் சேர்ந்த மாணவர்களிடம் விதிகளை மீறி கல்வி கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் விதிகளை மீறி கட்டணம் கேட்டு வற்புறுத்துவதோடு, அரசாங்க விதிமுறைகளை மதிக்க முடியாது என பள்ளி முதல்வர் கராராகப் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தை காற்றில் பறக்கவிடும் பள்ளி நிர்வாகம்

இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசால் 'இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE 2009)' கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி, அனைத்துத் தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்று, தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகப் பணத்தை வரவு வைக்கிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் (லைன்ஸ் கிளப் மெட்ரிகுலேஷன்) பள்ளியில், இந்த RTE திட்டத்தின் கீழ் பல ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டும் ஏமாற்றம்; இந்த ஆண்டும் கட்டாய வசூல்!

சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், கடந்த ஆண்டு தனது மகளை இச்சட்டத்தின் கீழ் மேற்கண்ட தனியார் பள்ளியில் எல்.கே.ஜி (LKG) வகுப்பில் சேர்த்துள்ளார். மாணவர் சேர்க்கையின் போது, பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு சங்கரை வற்புறுத்தியுள்ளது.

அப்போது, "தற்போது பணத்தைக் கட்டிவிடுங்கள், அரசாங்கத்திடம் இருந்து RTE தொகை வந்தவுடன் அந்தப் பணம் உங்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படும் அல்லது அடுத்த ஆண்டு கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும்" என பள்ளி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இதனை நம்பி, சங்கரும் தனது மகளின் கல்விக்காகக் கடன் வாங்கிப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.

தற்போது நடப்பு கல்வி ஆண்டில், அவரது மகள் யு.கே.ஜி (UKG) வகுப்பிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர் சங்கர் பள்ளி நிர்வாகத்திடம் சென்று, "கடந்த ஆண்டு அரசு தரப்பில் இருந்து வர வேண்டிய RTE தொகையைக் கழித்துக் கொண்டு, மீதமுள்ள விவரங்களைக் கூறுங்கள்" எனக் கேட்டுள்ளார். அதற்குப் பள்ளி நிர்வாகம், "அரசாங்கத்திடம் இருந்து கடந்த ஆண்டுக்கான எந்தத் தொகையும் வரவில்லை. எனவே, இந்த ஆண்டும் நீங்கள் முழுப் பணத்தையும் கட்டித்தான் ஆக வேண்டும். இல்லையெனில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்" எனத் திட்டவட்டமாகக் கூறியதாக சொல்லப்படுகிறது.

"அரசு விதியைப் பின்பற்ற முடியாது" - பெற்றோரை மிரட்டும் பள்ளி முதல்வர்

RTE சட்டம் குறித்த முழு விவரம் அறியாத பெற்றோர் சங்கர், இது குறித்துத் தனது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் சென்று பள்ளியின் முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார். "இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியரிடம் எந்தவொரு கல்வி கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அவ்வாறு இருக்கையில் நீங்கள் ஏன் பணம் கேட்கிறீர்கள்?" என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த பள்ளி முதல்வர், மிகவும் அலட்சியமாகவும், கராராகவும் பேசியுள்ளார். அவர் கூறுகையில்:

"எங்கள் பள்ளி மேனேஜ்மென்ட் (நிர்வாகம்) என்ன சொல்கிறதோ, அதை மட்டும்தான் எங்களால் செயல்படுத்த முடியும். அரசாங்கம் இன்னும் எங்களுக்குப் பணம் அனுப்பவில்லை. அரசு கூறும் எல்லா விதிமுறைகளையும் நாங்கள் அப்படியே பின்பற்றினால், எங்களால் பள்ளியை நடத்தவே முடியாது. மேனேஜ்மென்ட் உத்தரவுப்படி பணத்தைக் கட்டினால் மட்டுமே குழந்தையைச் சேர்க்க முடியும்."

என பெற்றோர்களிடம் பள்ளி முதல்வர் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். பெற்றோர்கள் நியாயம் கேட்டும், எவ்விதப் பரிவுமின்றி சட்டத்திற்குப் புறம்பாகப் பள்ளி முதல்வர் பேசியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

பள்ளி முதல்வரிடம் பெற்றோர் நியாயம் கேட்கும் போது, அங்கிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் இந்த வாக்குவாதத்தைப் படம்பிடித்துள்ளனர். பள்ளி முதல்வர், அரசாங்க விதிகளுக்கு எதிராகவும், ஏழைப் பெற்றோரை மிரட்டும் தொனியிலும் பேசும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) தளங்களில் மிக வேகமாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பலரும் இப்பள்ளியின் போக்கிற்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்படும் கிராமப்புற ஏழைகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசாங்கம் ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இத்தகைய நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், சில தனியார் பள்ளிகளின் மெத்தனப் போக்காலும், பண ஆசையாலும் இத்திட்டத்தின் நோக்கம் சிதைக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் கூறுகையில், "இப்பள்ளியில் எனது குழந்தைக்கு மட்டுமன்றி, RTE திட்டத்தின் கீழ் படிக்கும் பல மாணவர்களின் பெற்றோர்களிடமும் இதே போன்று மறைமுகமாகவும், நேரடியாகவும் கட்டணக் கொள்ளை நடத்தப்படுகிறது. ஏழை என்பதால் எங்களை மதிக்காமல் பேசுகிறார்கள். கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி இதனால் கேள்விக்குறியாகியுள்ளது" என வேதனை தெரிவித்தனர்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, விதிகளை மீறி செயல்படும் இந்தத் தனியார் பள்ளி மீது கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வசூலிக்கப்பட்ட கட்டணத்தை உடனடியாகப் பெற்றோர்களுக்குத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Embed widget