மேலும் அறிய

Mayiladuthurai: கடனை கேட்டு அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள் - மனம் உடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை

கடன் கொடுத்துவிட்டு கழுத்தை நெரிப்பது போல் அடியாட்கள் மூலம் அராஜகத்தில் ஈடுபட்ட வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை அருகே கடனை வசூலிக்க ரவுடிகளுடன் வந்து வீட்டில் புகுந்து அவமானப்படுத்திய தனியார் வங்கியால் மனம் உடைந்த விவசாயி பம்பு செட்டில் தூக்கு போட்டு தற்கொலை  செய்துகொண்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கப்பூர் ஊராட்சி மேல தெருவை சேர்ந்தவர் 35 வயதான வினோத்குமார். இவருக்கு சொந்தமாக சுமார் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. திருமணம் ஆகி ஐஸ்வர்யா என்ற மனைவியும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா காலக்கட்டதிற்கு முன்பு வரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் கொரோனா உரடங்கு காரணமாக ஊருக்கு வந்து விவசாயத்தில் ஈடுபட்டார்.


Mayiladuthurai: கடனை கேட்டு அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள் - மனம் உடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை

அப்போது கடந்த 2021-ம் ஆண்டு இவர் வீட்டின் பேரில் மயிலாடுதுறை தனியார் நிதி நிறுவன வங்கியில்  8 லட்சம் ரூபாய் கடன் பெற்று நெல் அறுவடை இயந்திரம் வாங்கியுள்ளார். தொடர்ந்து  விவசாய தொழில் எதிர்பார்த்த அளவு செல்லாத காரணத்தால் பணம் திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது.  மாதம் 17 ஆயிரத்து 500 ரூபாய் தவணை தொகை கட்டி வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வரை 6 மாதம் தவணைத் தொகை கட்டாமல் நிலுவையில் இருந்த நிலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். 

அதற்குப் பின் ஆகஸ்ட் மாதத்திற்கு கட்டவேண்டிய தவணை தொகையை கட்டுவதற்கு தாமதமான காரணத்தால் வங்கி ஊழியர்கள் அடியாட்களுடன் அவரது வீட்டிற்கு சென்று நோட்டீஸ் ஒட்டி அவரது மனைவி மற்றும் உறவினர்களை தகாத வார்த்தையில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் வந்து மிரட்டல் விடுவதாகவும், இதனால் மனமுடைந்த வினோத்குமார் தனது வயல்வெளிக்கு சென்று மோட்டார் பம்ப் செட்டில் கைலி மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


Mayiladuthurai: கடனை கேட்டு அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள் - மனம் உடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை

வினோத்குமார் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் அவரை தேடி அவரது உறவினர்கள் சென்று பார்க்கையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த காவல்துறையினர் வினோத்குமாரின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Mayiladuthurai: கடனை கேட்டு அவமானப்படுத்திய வங்கி ஊழியர்கள் - மனம் உடைந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை

மேலும் கடன் கொடுத்துவிட்டு கழுத்தை நெரிப்பது போல் அடியாட்கள் மூலம் அராஜகத்தில் ஈடுபட்ட வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீட்டில் வந்து தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் முறையாக வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும், குற்றம் சாட்டிய உறவினர்கள் இறந்தவர் உடலை பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மயிலாடுதுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Israel - Palestinian War: இந்தியா - இஸ்ரேல்.. நட்பு நாடுகளுக்கு எதிராக குவியும் அமெரிக்க ஆயுதங்கள் - வியாபாரத்தின் கோர முகமா?

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

  

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?
கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget