மேலும் அறிய

உருது வகுப்பில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! - ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை !

35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

மும்பையில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஆசிரியர் ஒருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

மும்பையில் உருது வகுப்புகளை நடத்தி வந்த மௌலவி என அழைக்கப்படும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளுள் ஒருவரான 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவத்தன்று அந்த 8 வயது பெண் குழந்தையை , அவரது சித்தி ( மாற்றாந்தாய்) மதிய வகுப்பிற்கு தயாராகுமாறு கூறியிருக்கிறார். அந்த பெண் பயந்து அழுதுக்கொண்டே , நான் வகுப்பிற்கு செல்லமாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். இது குறித்து அந்த குழந்தையின் சித்தி விசாரித்த பொழுதுதான் அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவத்தை அந்த குழந்தை தெரிவித்திருக்கிறார். உருது கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் மௌலவி  தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும் , அதனால் தனக்கு ஏற்பட்ட வலி இருப்பதையும் குழந்தை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.அதிர்ந்து போன அப்பெண்ணின் சித்தி , காவல்துறையில் அந்த நபரின் மீது புகார் அளித்துள்ளார்.


உருது வகுப்பில் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ! - ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை !
வினோபா பாவே மார்க் காவல் நிலையத்தில் மௌலவிக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினமே மௌலவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களாக  நடைப்பெற்ற நிலையில் அரசு வழக்கறிஞர் வீணா ஷெலர் 10  சாட்சியங்களை விசாரித்தார். மேலும் சில சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில் மௌலவி  பாதிக்கப்பட்ட பெண் குழந்தையையும் அவரது சகோதரியையும் பின் தொடர்ந்து செல்வதை காண முடிந்துள்ளது. இது குறித்து குற்றவாளி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , அவரை பொய்யாக இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் , அவர் ஒரு  மௌலவி  அல்ல , சாதாரண தையல்காரர் என கூறினர். இதற்கான சாட்சியங்களை முன் வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் , அவர் மாணவர்களுக்கு உருது வகுப்புகள் எடுக்கும் சில சிசிடிவி காட்சிகளை எடுத்து வைத்தார்.


இந்த வழக்கு விசாரணையில் அந்த உருது ஆசிரியர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததது உறுதியான நிலையில் , 35 வயதான மௌலவிக்கு சிறப்பு POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012) பிரிவின் கீழ் , 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டார். ஆசிரியர் என்ற போர்வையில் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட மௌலவியின் செயல் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கோபத்தையும் , ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , அவர்களின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கேட்டறிவது அவசியம்.

தலைப்பு செய்திகள்

" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Embed widget