மேலும் அறிய

pocso: சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியர் போக்சோவில் கைது

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் & பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி, நடுச்சூரங்குடி, ஸ்ரீரங்கபுரம், பத்துவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களை சுற்றி வசிக்கும் மாணவ, மாணவிகள் புதுச்சூரங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் 16 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு பணிபுரிந்து வரும் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர் அங்கு பயிலும் மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தங்களில் தகாத வார்த்தைகளால் பேசுவது, தகாத வார்த்தைகளில் திட்டுவது என இருந்து வந்துள்ளார். மேலும் அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக  தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்குள்ளான மாணவிகள் இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தான் ஆசிரியர் தாமோதரனை கண்டித்து  பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஆசிரியர் தாமோதரனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பள்ளி முன்பு அமர்ந்தும் போராட்டத்தை தொடர்ந்தனர். தகவல் அறிந்த சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மற்றும் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான ஏராளமான போலீசார்    சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


pocso: சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியர் போக்சோவில் கைது

இதனிடையே இந்தப் பிரச்சினை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி மற்றும் கல்வி அதிகாரிகள், காவல்துறையினர் என பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் நடத்திய விசாரணையின் முடிவில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய பள்ளி ஆசிரியர் தாமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி அறிவிப்பு வெளியிட்டார்.


pocso: சாத்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: கணித ஆசிரியர் போக்சோவில் கைது

மேலும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரின் சாத்தூர் தாலுகா போலீசார் பள்ளி ஆசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். ஆசிரியரை கைது செய்து அழைத்து வரும்போது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆசிரியரை தாக்கமுற்பட்டனர். இதனையடுத்து சுதாரித்த போலீசார் பாதுகாப்புடன் ஆசிரியரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தாமோதரனிடம் காவல்துறையினர் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget